மாளவ்ய யோகம் என்றால் என்ன? உங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கிறதா?!

Published:

Navagraha Hindu Gods and Deities 1 - 2026

பஞ்ச மகா புருஷக்கிரகங்களில்  பஞ்ச பூதத் தத்துவத்தை பிரதிபலிக்கும் நீர் கிரகமான சுக்கிரன் லக்னத்துக்கு கேந்திரங்களில் ஆட்சி ,உச்சம் பெற்று பலமாக இருந்தால் கிடைப்பது மாளவ்ய யோகம் ஆகும்.

இந்த யோகமானது வாழ்க்கையில் சுக செளக்கியங்கள் மற்றும் இன்ப வாழ்வினைப் பெறுவதுடன், செல்வம், செல்வாக்கையும் பெற்று ஆடம்பரவாழ்வினையும் , சுகஜீவிகளாக  இருக்கும் நிலையினையும் தருகின்றது .

மேலும் உடலுறவு சம்பத்தப்பட்ட சுகத்தை அதிகம் அனுபவிப்பதுடன், கெளரவ பதவிகளையும், வாகனம், பணியாட்கள் ஆடம்பரமான மாளிகையுடன் கூடிய சொகுசான வாழ்க்கையையும் அளிக்கும் . சுக்கிரன் இன்ப சுகத்தை அள்ளி வழங்கி விடும் கிரகம்

இந்திர போக வாழ்க்கை என்று கூட சொல்லாம். பொதுவாகவே சுக்கிரன் என்றாலே எதிர்பார்ப்புக் கிரகம் எனலாம்.

சுக்கிரன் அளிக்கும் மாளவ்ய யோகமும் கூட அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தவே செய்யும். சுக்கிரனின் மாளவ்ய யோகம் தடைகளைக் கடந்தால் தான் கிடைக்கும்.

அதுதான் சுக்கிரன் லக்னத்துக்கு கேந்திரத்தில் ஆட்சி உச்சத்தில் உள்ளாரே !
ஆஹா ! மாளவ்ய யோகம் தான் என தீடீர் முடிவு கட்டி ஆனந்தம் கொள்ளக் கூடாது

யோக பங்கநிலைகளையெல்லாம் கடந்து பலமாக உள்ள சுக்கிரன் பழுதில்லாமல் இருந்தால் தான் மாளவ்ய யோகத்தை அள்ளி வழங்குவார், அள்ளி வழங்கி ஊதாரித்தனமாக செலவு  செய்ய வைத்து ஒன்றும் இல்லா மனிதனைப் போல் ஆக்கி விடவும் செய்வார்.

பரிகார ஜோதிடர் Sகாளி ராஜன்
ராஜ ஸ்ரீ ஜோதிடநிலையம், இலத்தூர் ,
தொடர்புக்கு :  984371 O327.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img