
இன்றைய பஞ்சாங்கம் – ஜூன் 16
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆனி~ 2 ( 16.6.2026 ) செவ்வாய் கிழமை.
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம் ~ ஆனி மாஸம் { மிதுன மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ காலை 7.00 AM ப்ரதமை பின் மறுநாள் (அதி)காலை 4.39 AM வரை த்விதீயை அதன் பின் திருதீயை.
நாள் ~ { பௌம வாஸரம் } செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ இரவு 7.30 PM வரை திருவாதிரை பின் புனர்பூசம்.
யோகம் ~ கண்டம் / வ்ருத்தி.
கரணம் ~ பவம் / பாலவம் / கௌலவம்.
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம்.
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 AM and 4.30 to 5.30 PM
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 5.54.
சந்திராஷ்டமம்~ விருச்சிகம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ சூன்ய.
இன்று ~ சந்த்ரதர்சனம்.
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (16-6-2026) ராசி பலன்கள்
மேஷம்
திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உருவாகும். தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பாகப்பிரிவினை முயற்சிகள் கைகூடும். எண்ணிய சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.
பரணி : புரிதல் உருவாகும்.
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தனம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.
ரோகிணி : முடிவுகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையில் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் பேசும்போது கவனம் வேண்டும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : மோதல்கள் நீங்கும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : அனுபவங்கள் கிடைக்கும்.
கடகம்
எதிர்பாராத சில உதவிகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். அந்நிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். சகோதரர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். மற்றவர்கள் கருத்துக்களால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : நன்மைகள் கிடைக்கும்.
பூசம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
ஆயில்யம் : எதிர்ப்புகள் நீங்கும்.
சிம்மம்
குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்த இன்னல்கள் குறையும். தகவல் துறைகளில் இருப்பவர்களுக்கு லாபங்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலம் உண்டாகும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
கன்னி
சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். சமூக பணி செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
உத்திரம் : தெளிவுகள் ஏற்படும்.
அஸ்தம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
துலாம்
சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். உறவினர்களால் சுப விரயங்கள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சமூக தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். இறை சார்ந்த வழிபாட்டில் ஈடுபாடு ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
சித்திரை : விரயங்கள் உண்டாகும்.
சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.
விசாகம் : ஈடுபாடு மேம்படும்.
விருச்சிகம்
பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்.
அதிர்ஷ்டதிசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : சோர்வுகள் உண்டாகும்.
அனுஷம் : வாதங்களை தவிர்க்கவும்.
கேட்டை : புரிதல்கள் மேம்படும்.
தனுசு
நண்பர்கள் வழியில் ஒற்றுமை ஏற்படும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தவறி போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : ஆர்வம் ஏற்படும்.
பூராடம் : குழப்பங்கள் குறையும்.
உத்திராடம் : அனுபவங்கள் கிடைக்கும்.
மகரம்
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். தன நெருக்கடிகள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
திருவோணம் : ஆதாயம் ஏற்படும்.
அவிட்டம் : உதவிகள் சாதகமாகும்.
கும்பம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்து யோசிப்பீர்கள். சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்ற முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : ஆதரவான நாள்.
சதயம் : மதிப்புகள் மேம்படும்.
பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
மீனம்
ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். வேலையாட்களிடம் அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணப்படும். கலை சார்ந்த பணிகளில் புதுமையான அனுபவங்கள் ஏற்படும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். இறை சார்ந்த சிந்தனையும் வழிபாடும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு உண்டாகும்.
ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருப்பாற்கடல்
திருமழிசையாழ்வார் – பெரிய திருவந்தாதி
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ்
இப்பாசுரத்தில் ஆழ்வார், மனதை முன்னிலைப்படுத்தி, எம்பெருமான் நாராயணனின் பெருமைகளைப் பாடுவதே சிறந்த பணி என்று கூறி, மனதை உற்சாகப்படுத்தி, தம்மோடு இணைந்து பாசுரம் பாட அழைக்கிறார். இது பக்தி மற்றும் ஆத்ம சமர்ப்பணத்தை வலியுறுத்தும் வரிகள்.
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே: இறைவனைப் பற்றிப் பேசுவதில் மிகுந்த உற்சாகத்துடன் (முயற்சியை) சுமந்துக்கொண்டு, எழத் துடிக்கும் மனமே!
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி: எங்களுடன் கூடி, பாசுரங்களை இயற்றுவாய்.
நயப்பு உடைய நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம்: இனிமையான தமிழ் பாசுரங்களில், எம்பெருமானின் புகழைப் பொதிந்து வைப்போம்.
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்: காந்தள் மலர் போன்ற திருமேனி கொண்ட நாராயணனின் புகழைப் பாடுவோம்.
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
- குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
(கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
சிந்தனைக்கு..
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!





nice information thanks for sharing this learning. I like this one, with this impulse to create a new one.