
இன்றைய பஞ்சாங்கம் – ஆக.04
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
ஆடி~ 19 ( 4.8.2026 ) செவ்வாய் கிழமை.
வருடம் ~ பரபாவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ க்ரீஷ்ம ருது.
மாதம் ~ ஆடி மாஸம் { கடக மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ இரவு 7.50 PM வரை ஷஷ்டி பின் ஸப்தமி.
நாள் ~ { பௌம வாஸரம் } செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ இரவு 8.30 PM வரை ரேவதி பின் அச்வினி.
யோகம் ~ த்ருதி.
கரணம் ~ கரஜை / வணிஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30 PM.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30 AM.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 AM and 4.30 to 5.30 PM.
குளிகை ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM.
சூரியஉதயம் ~ காலை 6.05 AM.
சந்திராஷ்டமம்~ இரவு 8.29 PM வரை ஸிம்ஹம் பின் கன்னி.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ ஷஷ்டி.
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (4-8-2026) ராசி பலன்கள்
மேஷம்
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விடாப்படியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.
பரணி : எதிர்ப்புகள் நீங்கும்.
கிருத்திகை : அலைச்சல் உண்டாகும்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பொழுதுபோக்கு செயல்களால் விரயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கிருத்திகை : ஒற்றுமை ஏற்படும்.
ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : விரயம் உண்டாகும்.
மிதுனம்
தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். விளையாட்டுப் போட்டிகளில் விவேகம் வேண்டும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். பயணம் சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : விவேகம் வேண்டும்.
திருவாதிரை : புதுமையான நாள்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும். விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
புனர்பூசம் : தெளிவுகள் பிறக்கும்.
பூசம் : விட்டுக்கொடுத்து செயல்படவும்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் உடலில் சோர்வுகள் உண்டாகும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். பணிகளில் திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : சோர்வுகள் உண்டாகும்.
உத்திரம் : மதிப்புகள் தாமதமாகும்.
கன்னி
குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவுகள் வழியில் ஆதரவு உண்டாகும். வெளியூரில் இருந்து இன்பமான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சில சூட்சுமங்களை அறிவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
உத்திரம் : அறிமுகம் ஏற்படும்.
அஸ்தம் : ஒத்துழைப்பான நாள்.
சித்திரை : சூட்சுமங்களை அறிவீர்கள்.
துலாம்
எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
சித்திரை : பயணங்கள் உண்டாகும்.
சுவாதி : ஈடுபாடு உண்டாகும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
விருச்சிகம்
முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மனதை உறுத்திய பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேர்ப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். ஆராய்ச்சி கல்விகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் சாதகமாகும். குழந்தைகள் இடத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பொருளாதார விஷயங்களில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : தடைகள் விலகும்.
அனுஷம் : முன்னேற்றமான நாள்.
கேட்டை : மேன்மை உண்டாகும்.
தனுசு
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். அரசு பணிகளில் இருந்த சிக்கல்கள் குறையும். வழக்கு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
மகரம்
சுபகாரிய தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றிகள் கிடைக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.
திருவோணம் : தீர்வு கிடைக்கும்.
அவிட்டம் : ஆதாயகரமான நாள்.
கும்பம்
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். காப்பீடு செயல்களில் ஆர்வம் உண்டாகும். வாசனை திரவிய பணிகளில் மேன்மை உண்டாகும். தாய் வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
சதயம் : மேன்மை உண்டாகும்.
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
மீனம்
நட்பு வட்டம் விரிவடையும். பொதுப்பணியில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான செயல்களில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தொழில் சார்ந்த முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.
தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்

திருப்பாற்கடல்
திருமழிசையாழ்வார் – பெரிய திருவந்தாதி
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ்
இப்பாசுரத்தில் ஆழ்வார், மனதை முன்னிலைப்படுத்தி, எம்பெருமான் நாராயணனின் பெருமைகளைப் பாடுவதே சிறந்த பணி என்று கூறி, மனதை உற்சாகப்படுத்தி, தம்மோடு இணைந்து பாசுரம் பாட அழைக்கிறார். இது பக்தி மற்றும் ஆத்ம சமர்ப்பணத்தை வலியுறுத்தும் வரிகள்.
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே: இறைவனைப் பற்றிப் பேசுவதில் மிகுந்த உற்சாகத்துடன் (முயற்சியை) சுமந்துக்கொண்டு, எழத் துடிக்கும் மனமே!
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி: எங்களுடன் கூடி, பாசுரங்களை இயற்றுவாய்.
நயப்பு உடைய நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம்: இனிமையான தமிழ் பாசுரங்களில், எம்பெருமானின் புகழைப் பொதிந்து வைப்போம்.
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்: காந்தள் மலர் போன்ற திருமேனி கொண்ட நாராயணனின் புகழைப் பாடுவோம்.
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
- குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
(கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
சிந்தனைக்கு..
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!

