
இன்றைய பஞ்சாங்கம் – மார்ச் 17
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
பங்குனி~ 03
(17. 3.2026) செவ்வாய் கிழமை.
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாஸம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 8.56 am வரை த்ரயோதசி பின் சதுர்த்தசி
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம்~ சதயம்
யோகம் ~ சித்தம் /
கரணம் ~ வணிஜை
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 6.24
சந்திராஷ்டமம்~ கடகம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ சதுர்த்தசி
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (17-3-2026) ராசி பலன்கள்
மேஷம்
சமயோசிதமான செயல்பாடுகள் மூலம் வளர்ச்சி அடைவீர்கள். உயர்கல்வியில் மேன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்து வந்த ஏற்ற இறக்கங்கள் குறையும். பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
அஸ்வினி : மேன்மை ஏற்படும்.
பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கிருத்திகை : ஆதரவுகள் கிடைக்கும்.
ரிஷபம்
பயணங்கள் மூலம் எண்ணங்கள் ஈடேறும். அரசு வழியில் உதவிகள் சாதகமாகும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈர்ப்புகள் அதிகரிக்கும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கிருத்திகை : உதவிகள் சாதகமாகும்.
ரோகிணி : ஒத்துழைப்பான நாள்.
மிருகசீரிஷம் : அறிமுகம் உண்டாகும்.
மிதுனம்
உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளால் அலைச்சல்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் ஆலோசனை வேண்டும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
கடகம்
இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். புதிய உணவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். எதிர்பார்த்த சில வரவுகளில் தாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொன் பொருள்களில் கவனம் வேண்டும். குடும்ப விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
புனர்பூசம் : குழப்பமான நாள்.
பூசம் : தாமதம் ஏற்படும்.
ஆயில்யம் : விவேகத்துடன் செயல்படவும்.
சிம்மம்
நண்பர்களின் வருகை மனதிற்கு மன நிறைவை கொடுக்கும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி லாபம் பெறுவீர்கள். வங்கி கடன் உதவிகள் சிலருக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும். மனை விற்றல், வாங்கலில் மேன்மையான சூழல் உண்டாகும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : லாபகரமான நாள்.
பூரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரம் : மேன்மையான நாள்.
கன்னி
பணிபுரியும் இடத்தில் மாற்றங்கள் பிறக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரம் சார்ந்த கடன் உதவிகள் சாதகமாகும். அசதிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
உத்திரம் : மாற்றங்கள் பிறக்கும்.
அஸ்தம் : வேறுபாடுகள் மறையும்.
சித்திரை : உதவிகள் சாதகமாகும்.
துலாம்
வாக்கு சாதுரியம் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கவிதை மற்றும் இலக்கிய பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் விவேகத்துடன் செயல்பட்டு முடிவு எடுப்பது நன்மையளிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
சித்திரை : ஈடுபாடு உண்டாகும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : விவேகத்துடன் செயல்படவும்.
விருச்சிகம்
மனதில் பழைய நினைவுகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். வாகனம் பயணங்களில் நிதானம் வேண்டும். சுபகாரிய தொடர்பான பேச்சு வார்த்தைகளை பொறுமையுடன் செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். விவசாயம் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
விசாகம் : மாற்றங்கள் ஏற்படும்.
அனுஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.
தனுசு
திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். விவசாய பணிகளில் கவனம் வேண்டும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசியல் துறையில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : வெற்றிகரமான நாள்.
பூராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
உத்திராடம் : இன்னல்கள் குறையும்.
மகரம்
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். போட்டி சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : மாற்றங்கள் ஏற்படும்.
அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.
கும்பம்
தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்மறை சிந்தனைகள் வெளிப்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் செய்திகளால் செலவுகள் மேம்படும். மனதளவில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
அவிட்டம் : மோதல்கள் நீங்கும்.
சதயம் : புரிதல் உண்டாகும்.
பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.
மீனம்
எண்ணிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன் பிறத்தவர்களுடைய சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அனுபவங்கள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : அபிவிருத்தியான நாள்.
உத்திரட்டாதி : புரிதல்கள் மேம்படும்.
ரேவதி : நெருக்கடிகள் குறையும்.

தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
திருப்பாற்கடல்
திருமழிசையாழ்வார் – பெரிய திருவந்தாதி
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ்
இப்பாசுரத்தில் ஆழ்வார், மனதை முன்னிலைப்படுத்தி, எம்பெருமான் நாராயணனின் பெருமைகளைப் பாடுவதே சிறந்த பணி என்று கூறி, மனதை உற்சாகப்படுத்தி, தம்மோடு இணைந்து பாசுரம் பாட அழைக்கிறார். இது பக்தி மற்றும் ஆத்ம சமர்ப்பணத்தை வலியுறுத்தும் வரிகள்.
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே: இறைவனைப் பற்றிப் பேசுவதில் மிகுந்த உற்சாகத்துடன் (முயற்சியை) சுமந்துக்கொண்டு, எழத் துடிக்கும் மனமே!
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி: எங்களுடன் கூடி, பாசுரங்களை இயற்றுவாய்.
நயப்பு உடைய நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம்: இனிமையான தமிழ் பாசுரங்களில், எம்பெருமானின் புகழைப் பொதிந்து வைப்போம்.
நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ்: காந்தள் மலர் போன்ற திருமேனி கொண்ட நாராயணனின் புகழைப் பாடுவோம்.
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
- குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
(கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
சிந்தனைக்கு..
உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!
உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!
ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!





nice information thanks for sharing this learning. I like this one, with this impulse to create a new one.