உக்ரைனிலிருந்து மீட்டு வரப்படும் மாணவர்களில் பலரும் நன்றி தெரிவிக்கிறார்கள் அரசுக்கு. பெற்றோர் கண்களில் கண்ணீருடன் மீண்டு வந்த பிள்ளைகளை கட்டித்தழுவுகிறார்கள், அரசுக்கு நன்றி சொல்கிறார்கள்!
மாறாக ஒரு சிலர் அரசியல்வாதி போல பேசுகிறார்கள், “என்ன பெரிதாக கிழித்து விட்டது அரசு?” என்று. ‘இவர்கள் பெற்றோர்கள் நல்ல முறையில் சம்பாதித்து அந்த பணத்தில் இவர்களை வெளிநாடு அனுப்பியிருந்தால் இப்படி பேசுவார்களா?’ என்ற கேள்வி எழுகிறது… Garbage-in , Garbage-out! அரசுக்கு இருக்கும் பணிகளில் இந்த ஆராய்ச்சியில் அரசு இறங்க வாய்ப்பில்லை.
என்றாலும், உயிரின் மதிப்பறியாத இவர்களை, காஷ்மீர் – லடாக் – அருணாச்சல் எல்லையில் இரண்டு வருடம் கட்டாய சேவையில் அமர்த்தினால் ஒரு வேளை அவர்களுக்கு உயிரின் அருமை தெரியலாம், ‘எத்தனை இன்னல்களுக்கிடையே நம்மை அரசு மீட்டிருக்கிறது?’ என்பது புரியலாம்!
சீனா இன்று தான் முதல் விமானத்தில் தன் பிரஜைகளை உக்ரைனிலிருந்து கொண்டுவந்திருக்கிறது! அமெரிக்கா ஒருவரையும் மீட்கவில்லை. அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஷான் பென் பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று எல்லையை கடந்திருக்கிறார்.
குவைத் போர், ஈராக் போர், லிபியா பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளின்போது மீட்பு பணிகளுக்கு பல மாதங்கள் எடுத்து கொண்டது அப்போதிருந்த காங்கிரஸ் அரசு! ஒரே வாரத்தில் மக்களை வெளியேற்றுகிறது மோதி அரசு!
சிரியா, யெமென், ஆஃப்கானிஸ்தான் மீட்பு பணி முதல் உக்ரைன் மீட்பு பணி வரை – போர் செய்பவர்களிடம் பேசி, சில மணி நேரங்கள் போரை நிறுத்தி, அந்த இடைவெளியில் பிரஜைகளை மீட்டிருக்கிறது மோதி அரசு…
இதற்கிடையில், நாடு திரும்பும் மாணவர்களுக்கு, இங்கேயே படிப்பை தொடர ஏற்பாடு செய்கிறாராம் மோதி ஜி. “நாங்கள் இந்தியா வேண்டாம் என்று தான் வெளிநாடு சென்றோம், எங்களை ஏன் இந்த பாஸிஸ்ட் மீண்டும் இந்தியாவிலேயே இருக்க சொல்கிறார்?” என சில “மாணவர்கள்” பொங்குவார்கள். Just wait for it!
மழை பெய்யும் போது எல்லோருக்கும் சேர்த்து தான் பெய்கிறது – நல்லவர்களுக்கு தனியாக மழை, கெட்டவர்களுக்கு தனியாக என்று இல்லை.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு!
மீண்டு வருபவர்களில் எத்தனை பேர் அரசியல்வாதிகள் / அரசு அதிகாரிகள் பிள்ளைகள் என்று பார்த்தால் எளிதில் விவரம் புரியும். சமாஜ்வாதி அரசியல்வாதி மகள், காங்கிரஸ்காரி மகள் ஒருத்தி என பலரும் சிக்குகிறார்கள்!
- செல்வ நாயகம்