மண்ணின் மைந்தர்களான காஷ்மீர் பண்டிட்களின் 30 வருட துயரம் தீருமா?!

Published:

kashmiri pandit pic - 2026 இப்ப திடீருன்னு, கஷ்மீர் இஸ்லாமிய மக்களுக்காக உருகி, நட்டநடு சென்ட்டராக தங்களை காட்டிக்கொள்ள முயலும் அறிவிலிகளுக்காக,..

28 வருடங்களுக்கு முன்…
1990, ஜனவரி 19 இரவு, காஷ்மீர் பள்ளத்தாக்கில்..

மசூதிகளின் ஒலிபெருக்கிகள், அகாலமாய் அதிர ஆரம்பித்தன.

“ராலிவ், ஸாலிவ், யா காலிவ்” (Ralive, Tsaliv ya Galive),.. என திரும்பத் திரும்ப…!

மார்க்கெட்டுகள், இந்துக்கள் (பண்டிட்கள் மற்றும் சீக்கியர்களுக்கு என்றாலும்,.. பண்டிட்களே குறி!) கூடும் அனைத்து இடங்களிலும், இந்த எச்சரிக்கை மீண்டும் மீண்டும் ஒலித்தது. கூடவே,.. அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை காலி செய்து வெளியேறவில்லை எனில், எப்படி எல்லாம், துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவார்கள் (குரானில் சொல்லியபடி தான்!) என்று, மென்மேலும் அச்சுறுத்தல்கள்,.. கோஷமாய், திரும்பத்திரும்ப உச்ச ஸ்தாயியில் போர்க் கூக்குரலாய்!

கூடவெ, ஆயிரக் கணக்கில் இஸ்லாமியர்கள், நேற்றுவரை அண்டை வீட்டானாக வசித்தவன் கூட, தெருவில் கும்பலாக ஊர்வலமாய், அதே செய்திகளை – இல்லை, இறுதி மிரட்டல்களை, கூவியவாறே சென்றனர்!
kashmiripandit - 2026ஆங்காங்கே அவ்வப்போது காணும், கேள்விப்படும் இஸ்லாமிய தீவிரவாத செயல்களுக்கும், அன்றைய இரவின் மாறுபட்ட தீவிரவாத போர் அறைகூவலுக்கும் இருந்த வித்தியாசம்,.. ஒவ்வொரு பண்டிட் குடும்பத்தினரின் எலும்புக்குள்ளும் ஊடுருவி, மரண பயம், கவ்வியது. பயப்படுவது வெறு, மரணபயத்தில், மிரள்வது வேறு! குடும்பங்கள் மிரண்டன!

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

வீட்டுப் பெண்கள், பெண் பிள்ளைகள், பெண் குழந்தைகளுக்கு நிகழக்கூடிய கொடூரங்கள், பட்டியலிடப்பட்டன, இஸ்லாமிய தீவிரவாதிகளால்.! நடைமுறையில் அது நிகழும் காட்சிகள், ஒவ்வொரு குடும்பத்தலைவனின் கண் முன்னும் காட்சிகளாக விரிந்தன!
kashmiri pandits1 - 2026பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த தங்கள் நிலம், வீடு, சொத்துக்கள், எல்லாவற்றையும் விட்டு உயிர், மானத்துடன் குடும்பமாய் தப்பிக்க, அந்த ஒரு இரவாவது, அவகாசம் கிடைக்குமா,.. என்பதே அவர்கள் ப்ரார்த்தனையாக இருந்தது.!

“இந்தியாவுக்கு சாவு!
“(இஸ்லாத்தை) நம்பாதவர்களுக்கு (kafirs) சாவு!”
எனும் கோஷங்கள் பள்ளத்தாக்கின் மலை முகடுகளில் எதிரொலித்தன!
kashmiri pandits - 2026பண்டிட்களுக்கு புரிந்தது! சில வாரங்களுக்கு முன்னர்தான், அவர்களின் இனத் தலைவராக இருந்த பண்டிட் திக்கா லால் தப்லூ வை கொடூரமாய் கொன்று, பண்டிட் இன ஒழிப்பை துவங்கினர், இந்த இஸ்லாமிய தீவிர வாதிகள். அதன் தொடர்ச்சியாய், அத்தனை சிறு சிறு பண்டிட் தலைவர்களும் உட்பட, நூற்றுக்கணக்கில் தங்கள் இனத்தவர் கொல்லப்படுவது சகஜமாகி வந்தது.

ஒரு தீவிரவாதி, உள்ளூர் தொலைக்காட்சிக்கு, வெளிப்படையாக பேட்டி தந்தான்: “நான் எத்தனை பண்டிட்களை கொன்றேன் எனும் கணக்கு கூட வைத்துக் கொள்ள முடியவில்லை (அவ்வளவு அதிக எண்ணிக்கையில்!)”… என்று!

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

இவ்வளவு துணிச்சலுடன் இன ஒழிப்பை ஆரம்பித்தவர்கள், அன்றிரவு சொன்ன வார்த்தைகளை – இல்லை, கொலை மிரட்டல்களை – நிச்சயம் செயலில் செய்வார்கள், என்று புரிந்தது!

மடை திறந்த வெள்ளமாய் வெளியேற ஆரம்பித்த பண்டிட்களின் எண்ணிக்கை, அவ்வருட முடிவுக்குள் கிட்டத்தட்ட 3,50,000 (ஆம் மூன்றரை லட்சம்!) த்தை தாண்டியது!

மீறி எதோ நம்பிக்கையில் தங்கிவிட்ட அப்பாவி பண்டிட்கள், குடும்பம் குடும்பமாய், கொத்துக் கொத்தாய் வீடுகளில் இருந்து இழுத்து தெருவில் எறிந்து, கொல்லப் பட்டனர்!
protest against kashmir incident - 2026இன்று வரை,.. தாய் நாட்டிலேயே அகதிகளாய், முகாம்களில், பெரும் பாலானோர், வாழ்கின்றனர்!

அஸ்ஸாம், வட கிழக்கில், சட்ட விரோதமாய் உட்புகுந்த வெளிநாட்டு இஸ்லாமியருக்கு, “மனிதாபிமான” அடிப்படையில், குரல் கொடுக்கும், காங்கிரஸ், மமதா, கம்யூனிஸ்ட், மற்றும் அவர்கள் போன்றோருக்கும், நீண்ட நாள்/திடீர் மனித உரிமையாளர்களுக்கும்…

சமர்ப்பணம்! தெரியும்,… கேட்பீர்கள் என்று!

“ராலிவ், ஸாலிவ், யா காலிவ்” என்றால்,
— இஸ்லாத்துக்கு மாறிவிடு! (இல்லையேல்)
— இங்கிருந்து புலம் பெயர்ந்து, சென்று விடு !
இல்லையேல்,..
— செத்து விடு!

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

எனும், அமைதி மார்க்க “அன்பு மொழிகள்” அவை – இஸ்லாத்தை நம்பாதவருக்கானவை!

Related articles

Recent articles

spot_img