spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மதுரையில் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா!

மதுரையில் திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா!

- Advertisement -
thirumalai naickar birthdayu

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றிய நாயுடு மகாஜன சங்கம் சார்பாக மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா சங்க வளாகத்தில் நடந்தது.

இந்த விழாவிற்கு , ஓன்றிய அமைப்பாளர் பொன் கமலக்கண்ணன் தலைமை தாங்கி திருமலை மன்னர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். கோவிந்தன் பூஜைகளை செய்தார். தி.மு.க பேரூர் அவைத் தலைவர் திரவியம், சங்க ஒன்றிய நிர்வாகி புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குப்புசாமி வரவேற்றார். இதில், கரிக்கடை பாண்டி, கற்பகம் சுதாகர், பாபு, துரைராஜ், இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாஸ்கரன் நன்றி கூறினார்.


தேசிய வாக்காளர் தின உறுதி மொழி

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி தாதம்பட்டி-நீரேத் தான் மந்தை திடலில் எடுக்கப்பட்ட து.

இந்த நிகழ்சிக்கு, தாசில்தார் மூர்த்தி தலைமை தாங்கினார்.
செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், பேருராட்சித் தலைவர் மு.பால்பாண்டியன் வாக்காளர் உறுதி மொழி வாசித்தார். அப்போ து அவர் அதில் கூறியதாவது: –

மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலம் கருதும் மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் ,மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம் இனம் ஜாதி வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப் போம் என்று உறுதி மொழி கூறுகிறோம் இவ்வாறு அவர் கூறினார். அதை மற்றவர்கள் தொடர்ந்து கூறினார். இதில், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெயகாந் தன், பூமிநாதன், மகளிர் சுயஉதவிக் குழுவினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்பட பொதுமக்களும் கலந்து கொண் டனர். முடிவில் ,இளநிலை உதவியாளர் முத்துபாண்டி நன்றி கூறினார்.


சோழவந்தான்எம்விஎம் கலைவாணி பள்ளியில் நாட்டின் 75வது குடியரசு தின விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ளஎம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளியின் தாளாளர் எம் வி எம் மருது பாண்டியன் தேசிய கொடி ஏற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார் இதில் எம் வி எம் குழும தலைவரும் தொழிலதிபருமான மணி முத்தையா வள்ளி மயில் மற்றும் பள்ளி முதல்வர் செல்வம் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இதில் கட்டுரை போட்டி பேச்சு போட்டி இலக்கியப் போட்டி போன்ற தனித்திறனை நிரூபிக்கும் போட்டிகள் நடைபெற்றது தொடர்ந்து மாணவ மாணவிகளின் மாறுவேட போட்டிகள் நடைபெற்றது இதில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் உருவம் தாங்கி மாணவ மாணவிகள் மேடையில் வந்து தங்களது திறமை வெளிப்படுத்தினர் குடியரசு தின விழா போட்டிகளில் கலந்து கொண்டஅனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe