December 5, 2025, 1:58 PM
26.9 C
Chennai

தேஜாஸ்ரீ விரைவில் தமிழுக்கு ஆஜா ஆஜா!

teja sri - 2025

சென்னை: இப்போது மராத்தி மொழிப்படங்களில் பிஸியான நடிகையாக இருக்கிறேன். மீண்டும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பேன் என்று நடிகை தேஜாஸ்ரீ தெரிவித்துள்ளார்.

நடிகை தேஜாஸ்ரீ 2003ஆம் ஆண்டில் து பால் பிரம்மச்சாரி மெயின் ஹூன் கன்யா குன்வரி என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், அதற்கு பின்னர் அவருக்கு போதிய படவாய்ப்புகள் இல்லை.

teja 1 - 2025

இதனால் ஏமாற்றத்திலிருந்த தேஜாஸ்ரீக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் முதன் முறையாக ஒற்றன் படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்ற பாடலுக்கு நடனமாடி மக்களிடையே பிரபலமானார்.

இவர் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை த்ரிஷா உடன் இணைந்து நடித்த உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இடையில் பட வாய்ப்புகள் குறையவே, தமிழ், தெலுங்கு, மராத்திய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்கில் மற்றும் கதாநாயகியாகவும் நடித்து வந்தார்.

teja - 2025

இதற்கு பின்பு மதுர, கோடம்பாக்கம், அது ஒரு கனாக்காலம், கள்வனின் காதலி போன்ற படங்களில் நடித்திருந்தாலும், இவை அனைத்தும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் தமிழ் படங்களிலும் ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டப்பட்டார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழில் போதிய படவாய்ப்புகள் இன்றி தவித்து வந்த வேளையில், ஒரு சில படங்களில் குத்துப் பாட்டுக்கு கவர்ச்சி டான்ஸ் ஆடும் வாய்ப்பே தொடர்ந்து கிடைத்து வந்தது. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இவரும் ஒற்றைப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வந்தார். இவருக்கு கதகளி, குச்சுப்புடி முதல் மேற்கத்திய நடனம் வரை அனைத்தும் கற்றிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் போதிய படவாய்ப்புகள் இல்லாதது குறித்து நடிகை தேஜாஸ்ரீ கூறுகையில், ‘இப்போது, மராத்தி மொழி திரைப்படங்களில் முக்கிய நாயகியாக நடித்து வருகிறேன். விரைவில் தமிழ்த் திரையுலகில் மீண்டும் நுழைந்து முத்திரை பதிப்பேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories