புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரை சேர்ந்தவர் கனகசபை(55). இவர் அந்தப் பகுதியில் ஏலசீட்டு நடத்தி வந்தார்.
இந்நிலையில் இன்று தனது வீட்டின் படுக்கை அறையில் விஷம் அருந்தி, தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட கனகசபை, பிரபல திரைப்பட நடிகர் ஆனந்தராஜின் தம்பி ஆவார்.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் பெரியகடை காவல்துறை விரைந்து சென்று, கனகசபை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.