காதல் கடிதம் கொடுத்த நபர்..  கண்டதும் கிளர்ந்த ஆசை..  தூக்கம் போன இரவுகள்! நினைவுகளை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

Published:

db64dceb9737f9a025564001f54ad801 - 2026

கடை திறப்பு விழா போன்றவற்றில் அடிக்கடி பங்கேற்று கல்லா கட்டிக் கொள்வார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்(keerthi suresh) சீக்கிரமாக முன்னணி நடிகையாக வளர்ந்தவர். இவரது வளர்ச்சி பல முன்னணி நடிகைகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யுடன் ஜோடி போட பல நடிகைகள் இன்னமும் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வந்த புதிதிலேயே இரண்டு படங்களில் ஜோடி போட்டு அசத்தினார்.

சினிமா கேரியர் நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில் பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்ததால் தனது உடல் எடையை பாதியாக குறைத்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் உடல் எடையை குறைத்த பிறகு வாய்ப்பு இல்லை என்று விட்டார்கள்.

தற்போது உடல் எடை குறைந்த கீர்த்தி சுரேஷ் பலவகையாக இணையதளங்களில் கிண்டலடிக்க படுவதை பார்க்க முடிகிறது. கீர்த்தி சுரேசை அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியும்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

கடை திறப்பு விழா போன்றவற்றில் அடிக்கடி பங்கேற்று கல்லா கட்டிக் கொள்வார். அப்படி ஒரு விழாவுக்கு செல்லும் போது திடீரென கீர்த்தி சுரேஷ் முன்பு ஒரு நபர் தோன்றிய அவருக்கு காதல் கடிதத்தை கிப்ட் ஆக கொடுத்தாராம்.

அதில் கீர்த்தி சுரேஷின் ஒவ்வொரு அங்க அசைவுகளும் இடம் பெற்று இருந்ததாம். இதனை பார்த்த கீர்த்தி சுரேஷ் அந்த நபர் மீது ஒரு விதமான ஆசை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் திடீரென்று தன் முன் தோன்றி இந்த மாதிரி செய்து அந்த நபரை என்னால் மறக்க முடியவில்லை என்றும், அந்த இரவு தனது தூக்கமே வரவில்லை எனவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
 

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img