
பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஏசி முகில் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்சன் படம் ஒன்றின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேமிசந்த் ஜெபக் தயாரித்து வரும் இந்த படத்திற்கு மிகபெப்ரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் பழம்பெரும் இயக்குன மகேந்திரன் மற்றும் நடிகை நிவேதா பேத்ராஜ். இவர்கள் இருவரும் இணைந்த பின்னர் இந்த படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
தளபதி விஜய்யுடன் இயக்குனர் மகேந்திரன் அவர்கள் நடித்த ‘தெறி’ திரைப்படம் உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டது. அவரது நடிப்பிற்கும் பாராட்டுக்கள் குவிந்தது. அதேபோல் இந்த படமும் பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



