‘தலைவன் இருக்கிறான்’ மூலம் கமல் ‘அரசியல் பிரசாரம்’?! உதயநிதி தவிர்த்தது அதனால்தானாம்!

kamal arrehman - 2026

அரசியல் களத்தில் குதித்து தலைவன் ஆகி, சற்று நீந்திக் கொண்டிருக்கும் கமல்ஹாசன், இப்போது ‘தலைவன் இருக்கிறான்’ மூலம் அரசியல் கலந்த சினிமாவுக்கு அடித்தளம் போட்டிருக்கிறார் கமல்! தமிழ், ஹிந்தி இரு மொழிகளில் படம் உருவாகிறது. பொருளாதாரம், நிழல் உலகம், அரசியல் கொள்கைகளை மையப்படுத்திய படம் என்று கமல்ஹாசன் ஏற்கெனவே இப்படம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் ‘விஸ்வரூபம் 2’, ‘சபாஷ் நாயுடு’ படங்களைத் தொடர்ந்து ‘தலைவன் இருக்கிறான்’ என்ற தலைப்பில் புதிய படத்தில் நடிக்கிறார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால், விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு திட்டமிட்டபடி சபாஷ் நாயுடு படத்தை எடுக்க முடியவில்லை. பல்வேறு பிரச்னைகளால் அதன் படப்பிடிப்பு பாதியிலே நிற்கிறது. இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் கட்சி என கமல் பிஸியாக சபாஷ் நாயுடு படம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது, 2017இல் அறிவிக்கப் பட்ட ‘தலைவன் இருக்கிறான்’ படம் குறித்து மீண்டும் செய்தி வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் கமல்ஹாசனுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த டிவிட்டினைக் குறிப்பிட்டு, உங்கள் பங்களிப்புடன் எனது அணியை வலுப்படுத்தியதற்கு நன்றி. சில திட்டங்களை உருவாக்கும் போது நன்றாகவும், சரியானதாகவும் உணர முடியும். தலைவன் இருக்கிறான் அத்தகைய ஒன்றாகும். இதற்காக உங்கள் உற்சாகத்தின் நிலை மிகவும் அளப்பரியது. அதை என் மற்ற குழுவினருக்கும் பரப்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

ஏஆர் ரஹ்மானின் பதிவை பகிர்ந்த கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை தொடங்கவிருப்பபதாக அறிவித்தார். இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். லைக்கா புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.

இது அரசியல் கதை என்பதால், கமல் சார்ந்துள்ள அரசியல் இயக்கத்துடன் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டைட்டிலும் தலைவன் இருக்கிறான் என்று இருப்பதால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

முன்னர் ஒரு வெப் டிவிக்கு அளித்த பேட்டியில், திமுக.,வின் தற்போதைய இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி, ”தலைவன் இருக்கிறான்” படக்கதையை என்னிடம் சொன்னார். அது அரசியல் கதையாக இருந்ததால் நான் செய்தால் நன்றாக இருக்காது. எனக்கு ‘பஞ்சதந்திரம்’ மாதிரியான கதைகள் இருந்தால் சொல்லுங்கள்” என்றேன்.. என்று தெரிவித்திருந்தார். எனவே, இந்த அரசியல் கதை, தற்போதைய தமிழக அரசியல் சூழல் களத்தில் எப்படி எதிர்கொள்ளும் என்ற விவாதம் இப்போதே கிளம்பிவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories