உலகெங்கும் பரவும் ச்பெக்ட்ரா ஜுரம்: சரித்திரம் படைக்கும் ஜேம்ஸ் பாண்ட்!

Published:

பல்வேறு வருடங்களாக உலகெங்கும் உள்ள மக்களை மகிழ்விக்கும் James Bond படங்களின் தொடர்ச்சியாக தயாராகும் படம்தான் ‘Spectre’. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த நடிகர்கள் ரசிகர்களின் ஆதர்ச நாயகர்களாக ஆவர் என்பதே எழுதப் படாத சட்டமாகி விட்டது.

எத்தனை வகையான படங்கள் வந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இருக்கும் ஆதரவு கூடுமே தவிரக் குறையாது என்பதற்கு ‘Spectra’ படத்துக்கு கிடைக்கும் வர்த்தக ரீதியான வரவேற்ப்பு தான் சான்று.

‘ச்பெக்ட்ரா’ என்று அழைக்க படும் கொடிய தீவிர வாத குழு ஒன்று உலகின் அமைதியை குலைக்கும் கொலை நோக்கு திட்டத்துடன் செயல்படுவதை அறிந்து அந்தக் கூட்டத்தில் ரகிசயமாக ஊருடுவும், ஜேம்ஸ் பாண்ட் அவர்களின் திட்டத்தை முறியடிக்க முயற்சி செய்கிறார்.

தேசிய பாதுக்காப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிக்கோ ஜேம்ஸ் பாண்டுடைய நடவடிக்கை மேல் அதிருப்தி. அதற்கான காரணம் என்ன, பொதுவாகவே ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் அழகான ராட்சசிகளான பெண்களுக்கு இந்தப் படத்தில் பங்கு என்ன என்பதை மிகவும் சுவராசியமாக படம் பிடித்து இருக்கிறார்கள்.

இன்று பல நாடுகளில் வெளி வந்த ச்பெக்ட்ரா இதுவரை நிலைத்து இருந்த வசூல் சாதனைகள் பலவற்றை முறியடித்து உள்ளது. உலகெங்கும் ச்பெக்ட்ரா ஜுரம் பரவி வருகிறது. திரையிடப்பட்ட இடங்களில் எல்லாமே வசூல் மழைதான்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்தியாவில் ‘ச்பெக்ட்ரா’ நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளி வரும் என சோனி pictures நிறுவனத்தினர் அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img