CMO-வில் எடியூரப்பா பெயர் பலகை பொருத்தப்பட்டது

14 May17 Name borad - 2026கர்நாடாகவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 104 இடங்களை கைபற்றி, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுனரின் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், 78 இடங்களை பெற்ற காங்கிரஸ், 38 இடங்களில் வென்ற மஜத வுடன் கூட்டணி அமைப்பது ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் உரிமை கோரியது. இந்நிலையில் கவர்னர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததுடன், 15 நாட்களில் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை வழக்கத்திற்கு மாறாக இரவு 2 மணிக்கு விசாரித்த உச்சநீதிமன்றம், எடியூரப்பா முதல்வராக தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.

பின்னர் விதான் சவுதா வந்த அவர், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், எடியூரப்பா பதவியேற்றதை எதிர்த்து காங்கிரஸ் – மஜத எம்எல்ஏ., சட்டபேரவை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் குதிரை பேரத்தை தடுக்க தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்த கருத்தில். பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

  1. தேர்தலுக்கு முன் மஜத(JDS)வை கன்னா பின்னாவென்று திட்டி விட்டு தன்னிடம் 78 தலையாட்டிகள் இருந்தும் வெறும் 38 தலைகளை வைத்து இருக்கும் JDSஸிடம் சரணடைந்து முதல்வர் பதவியையும் தாரை வார்த்து மக்களை முட்டாளாக்கப் பார்து மண்ணைக்கவ்வியது வெட்கக்கேடான செயல். ராகாவின் ராகம் அபஸ்வரமாகி வெகு நாட்களாகி விட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories