சினிமாவிற்குள் புகுந்த ராதிகா மகள்!

Published:

திரை உலகில் மட்டுமின்றி சின்ன திரையிலும் அன்றும் இன்றும் கொடி கட்டி பறக்கும் ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ராதிகா தனது தாயின் சுவடுகளில் நடந்து திரை வர்த்தகத்தில் ஈடுப்படுவது இயற்கையானது தான். இன்றியமையாததும் தான். பொருளாதாரத்தில் பட்டப் ப்படிப்பு முடித்த இவருக்கு விளையாட்டு மேலாண்மை துறையில் உள்ள ஆர்வத்தால் அந்த துறையிலே இங்கிலாந்து நாட்டில் உயர் பட்டம் பெற்றார்.

புலிக்கு பிறந்தது பூனையாக இருக்காது என்றக் கூற்றுக்கு ஏற்ப, இவரும் தற்போது தனது தாயின் வழியிலே ஊடக துறையில் கால் பதிக்க வருகிறார். New media division என்ற ஒரு நிறுவனத்தை ராடன் டி வியின் உட்பிரிவாக தொடங்கி அதன் மூலம் பல்வேறு யு tube சானல்களை நிர்வாகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.

பல்வேறு கலை நிகழ்சிகளும், ரியாலிட்டி shows ஆகியவை இந்தப் பிரிவின் கீழ் இயங்கும். பெரிதும் போற்றப் பட்ட எண்பதுகளின் நடிகர்களின் சங்கமம் இவரது சீரிய பொறுப்பில் தான் இயங்கியது. இவர் தற்போது தமிழ் திரை உலகிற்கு பல் வேறு திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் ராடான் குறும் பட விழா ஒன்றை நடத்த இருக்கிறார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

திரை உலகில் தங்களது திறமையை வெளி படுத்த வேண்டும் என்று இளைஞர்களின் கனவை நிறைவேற்ற இந்தப் போட்டி நிச்சயம் உறுதுணையாக இருக்கும். எங்களது நிறுவனத்தில் திறமையான இளைஞர்களுக்கு என்றுமே சிவப்பு கம்பள வரவேற்ப்பு உண்டு என்பதை நிரூபிக்கும் நோக்கமே இந்த குறும் பட விழா.

இயக்குனர்கள் பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், படதொகுபாளர் இயக்குனர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் நடுவர்களாக இருந்து, போட்டியில் கலந்துகொள்ளும் சிறந்த குறும் படத்தை தேர்வு செய்வார்கள்.

டிசம்பர் 20 ஆம் தேதி, போட்டியில் கலந்துக் கொள்ள படங்களை அனுப்பும் கடைசி தேதியாகும். பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி இறுதி சுற்று நடக்கும். இதில் வெற்றி பெறுவர்களுக்கு பரிசும், அவர்களது படைப்புக்கேற்ப பெரிய கௌரவமும், அங்கீகாரமும் தரப்படும். இது அவர்களது கலை பயணத்தில் பெரிதும் உதவும்’ என சாதிக்க போகும் நம்பிக்கையுடன் கூறினார் ரயான்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img