ஒரிஜினல் படத்த சிறுவனுடன் சேர்த்துட்டாங்க! ஐஸ்வர்யா ராய்

Published:

aishwarya rai2கல்யாண் ஜுவல்லர்ஸ் நகை கடையின் விளம்பர தூதராக இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். இதன் சமீபத்திய விளம்பரம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய், மகாராணி போன்று ஒரு ஷோபாவில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால் கருப்பு நிறத்திலான சிறுவர் ஒருவர் குடை பிடித்து கொண்டு நிற்கிறார். உலகமே இனப்பிரச்சனைகளின்றி மாறிவரும் நிலையில் இப்படி இனப்பிரிவினை மற்றும் இதற்கெல்லாம் மேல் குழந்தைத் தொழிலை ஊக்குவிப்பது போலவும் அந்த விளம்பரம் அமைந்துள்ளது என பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்து ஐஸ்வர்யா ராய் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களது கருத்துக்களை நான் மதிக்கிறேன். இதில் நான் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஒரிஜினல் படத்தையும் இணைத்துள்ளேன். பின்னர் இதை அந்த சிறுவன் படத்தோடு இணைத்துள்ளனர்.

ஒரு விளம்பரம் எப்படி அமைய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கிரியேட்டர் தான் முடிவு செய்கிறார். இதில் நான் என்ன செய்ய முடியும். இருந்தாலும், உங்களது கருத்துக்களை சம்பந்தப்பட குழுவினருக்கு அனுப்பி வைத்து பரிசீலிக்கும்படி கேட்டுள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img