February 21, 2026, 4:44 PM
30.4 C
Chennai

சாமி ஊருக்குள்ள வரும்போது பட்டாசு வெடிக்கக் கூடாதாம்!

hrce office chennai - 2026

இந்துசமய அறநிலையத்துறை அனைத்து கட்டளைதாரர்களிடம் சாமி எங்கள் ஊருக்கு வரும் போது பட்டாசு வெடிக்கமாட்டோம். அப்படி பட்டாசு வெடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்களே பொறுப்பு என எழுதி வாங்கியுள்ளனர்.

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாகத் திருவிழாவின் போதும் மற்றும் சாமி மலையேறும் நிகழ்ச்சியின் போதும் வருடந்தோறும் தொன்றுதொட்டு வாணவேடிக்கை நடப்பது வழக்கம். ஆனால் இந்துசமய அறநிலையத்துறை இந்த வருடம் வாணவேடிக்கை முற்றிலுமாக நடத்தக்கூடாது என தடை விதித்துள்ளனர்.

ஒருவருடத்திற்கு முன்பு கேரளாவில் கோவில் திருவிழாவின் போது நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் அங்குகூட இந்த ஆண்டு வாணவேடிக்கை நடத்த அரசு அனுமதியளித்தது.

ஆனால் திருச்செங்கோடு தேர்த்திருவிழாவின் போது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடக்கும் வாணவேடிக்கையை இந்துசமய அறநிலையத்துறை தடுப்பது ஏன்?

கோவில் கணக்குகள் ஒழுங்காக இல்லை.

கோவிலை சுத்தமாக வைப்பதில்லை.

இலவச காலணி காப்பகம் இல்லை.

கைலாசநாதர் கோவிலில் பக்தர்களுக்கு கழிப்பிடம் இல்லை.

கோவிலுக்கு தானமாக கொடுத்த அனைத்து மாடுகளும் கசாப்பு கடைகளுக்கு சென்றுவிட்டது.

கோவிலில் போதுமான பணியாளர்கள் நியமிக்கவில்லை.

மொத்தத்தில் கோவில் நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த அருகதை இல்லை.

ஆனால் தொன்றுதொட்டு வரும் வழக்கங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதில் இந்த அறங்கெட்டதுறை முழுமுனைப்பாக செயல்படுகிறது.

ஏற்கனவே பத்ரகாளியம்மன் கோவிலின் தேரோட்டம் இரவில் நடப்பதை அனுமதிக்காத அறநிலையத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றி பகலில் தேரோட்டம் நடத்தியது.

தற்போது வாணவேடிக்கை நடத்தக்கூடாது என கட்டளைதாரர்களிடம் எழுதி வாங்குகிறது.

நாளை திருவிழாவே நடத்தக்கூடாது என எழுதி வாங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்து பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படாதே…

பட்டாசு வெடிப்பது எமது உரிமை.

இந்து சமய அறநிலையத்துறையே…

இந்து பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படாதே…

அது அறநிலையத்துறைக்கு பிடிக்கவில்லை எனில் கோவிலை விட்டு வெளியேறு….

நமது வழிபாட்டு உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க அனுமதியோம். அறநிலையத்துறையின் இந்த அறங்கெட்ட செயலை எதிர்த்து பக்தர்களும், பொதுமக்களும் நமது கண்டனங்களைத் தெரிவிப்போம்…

போராடுவோம்… வெற்றி பெறுவோம்.

thiruchengote - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories