சாமி ஊருக்குள்ள வரும்போது பட்டாசு வெடிக்கக் கூடாதாம்!

hrce office chennai - 2026

இந்துசமய அறநிலையத்துறை அனைத்து கட்டளைதாரர்களிடம் சாமி எங்கள் ஊருக்கு வரும் போது பட்டாசு வெடிக்கமாட்டோம். அப்படி பட்டாசு வெடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்களே பொறுப்பு என எழுதி வாங்கியுள்ளனர்.

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாகத் திருவிழாவின் போதும் மற்றும் சாமி மலையேறும் நிகழ்ச்சியின் போதும் வருடந்தோறும் தொன்றுதொட்டு வாணவேடிக்கை நடப்பது வழக்கம். ஆனால் இந்துசமய அறநிலையத்துறை இந்த வருடம் வாணவேடிக்கை முற்றிலுமாக நடத்தக்கூடாது என தடை விதித்துள்ளனர்.

ஒருவருடத்திற்கு முன்பு கேரளாவில் கோவில் திருவிழாவின் போது நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் அங்குகூட இந்த ஆண்டு வாணவேடிக்கை நடத்த அரசு அனுமதியளித்தது.

ஆனால் திருச்செங்கோடு தேர்த்திருவிழாவின் போது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடக்கும் வாணவேடிக்கையை இந்துசமய அறநிலையத்துறை தடுப்பது ஏன்?

கோவில் கணக்குகள் ஒழுங்காக இல்லை.

கோவிலை சுத்தமாக வைப்பதில்லை.

இலவச காலணி காப்பகம் இல்லை.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

கைலாசநாதர் கோவிலில் பக்தர்களுக்கு கழிப்பிடம் இல்லை.

கோவிலுக்கு தானமாக கொடுத்த அனைத்து மாடுகளும் கசாப்பு கடைகளுக்கு சென்றுவிட்டது.

கோவிலில் போதுமான பணியாளர்கள் நியமிக்கவில்லை.

மொத்தத்தில் கோவில் நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த அருகதை இல்லை.

ஆனால் தொன்றுதொட்டு வரும் வழக்கங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதில் இந்த அறங்கெட்டதுறை முழுமுனைப்பாக செயல்படுகிறது.

ஏற்கனவே பத்ரகாளியம்மன் கோவிலின் தேரோட்டம் இரவில் நடப்பதை அனுமதிக்காத அறநிலையத்துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாற்றி பகலில் தேரோட்டம் நடத்தியது.

தற்போது வாணவேடிக்கை நடத்தக்கூடாது என கட்டளைதாரர்களிடம் எழுதி வாங்குகிறது.

நாளை திருவிழாவே நடத்தக்கூடாது என எழுதி வாங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்து பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படாதே…

பட்டாசு வெடிப்பது எமது உரிமை.

இந்து சமய அறநிலையத்துறையே…

இந்து பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படாதே…

அது அறநிலையத்துறைக்கு பிடிக்கவில்லை எனில் கோவிலை விட்டு வெளியேறு….

நமது வழிபாட்டு உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க அனுமதியோம். அறநிலையத்துறையின் இந்த அறங்கெட்ட செயலை எதிர்த்து பக்தர்களும், பொதுமக்களும் நமது கண்டனங்களைத் தெரிவிப்போம்…

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

போராடுவோம்… வெற்றி பெறுவோம்.

thiruchengote - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories