போர்வெல் போட்டதால் திருவல்லிக்கேணி சந்நிதி கட்டடம் புதைகிறது

Published:

parthasarathi temple - 2026

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பக்தர்கள் கவனத்திற்காக இதைக் கொண்டு வருகிறேன். அண்மையில் நான் சென்னைக்கு விஜயம் செய்த போது எடுத்த படங்களில் இது மிகவும் பாதித்த படம்.
திருவல்லிக்கேணி கோயிலை வலம் வந்தேன். கோயில் சந்நிதியைப் பார்த்துக்கொண்டு இருந்தேன் !! அப்போது திடீரெனத் தோன்றிய விஷயம். தண்ணீருக்காக அவர்கள் போட்டு இருக்கும் போர் கிணறு … கோவிலின் முழுமையான கட்டமைப்பையே அசைத்து இருப்பதாகத் தெரிகிறது ..

நீர் நிறைய எடுக்கப்பட்டு பூமியின் உள்ளே மண்சரிவு ஏற்பட்டு மெல்ல மெல்ல ஒரு பகுதி ரெங்கநாதன் சந்நிதி பக்க சுவர் புதைந்தது போல் தெரிகிறது. சென்னை வாசிகள் … திருவல்லிக்கேணி கோவிலுக்கு அருகில் இருப்பவர்கள் இதை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

விஜயராகவன் கிருஷ்ணன்

Related articles

Recent articles

spot_img