அரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா?

periyapattinam-katvettu
periyapattinam-katvettu

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் புதிதாக திறக்கப்பட இருக்கும் பஞ்சாயத்து கட்டட அலுவலகத்தில் இஸ்லாமியர்களின் முதல் தலைநகரம் பெரியபட்டினம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடத்தில் இஸ்லாமிய தலைநகரம் என குறிப்பிடுவது எப்படி அரசு அனுமதிக்கிறது.. கல்வெட்டு வைப்பதில் உள்ள பின்னணி உள்நோக்கத்தை உளவுத்துறை விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்து மன்னர்கள் ஆட்சி குறித்து தமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா? மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா? உண்மையிலா? என்று இந்து தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் இது குறித்து குறிப்பிட்ட போது…


இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் #நவாஸ்கனி தலைமையில் புதிதாக திறக்கப்பட இருக்கும் #பஞ்சாயத்துகட்டிட அலுவலகத்தில் இஸ்லாமியர்களின் முதல் தலைநகரம் பெரியபட்டினம் என குறிப்பிடப்பட்டுள்ளது..
இந்து தமிழர் கட்சியின் சார்பில் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

அனைத்து சமுதாய மக்களின் வாக்குகளை பெற்று மக்களின் வரிப்பணத்தில் அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடத்தில் இஸ்லாமிய தலைநகரம் என குறிப்பிடுவது எப்படி அரசு அனுமதிக்கிறது.?

மதசார்பற்ற அரசு என்று சொல்லி மக்களிடம் மாய்மாலம் பேசக் கூடிய அரசியல் தலைவர்கள் இதுகுறித்து அமைதியாக இருப்பதன் பின்னணி என்ன?

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை ஆண்ட இந்து மன்னர்கள் குறித்து கல்வெட்டுக்களை ஒவ்வொரு பகுதியிலும் அரசாங்கம் திறக்க முன்வருமா அனுமதிக்குமா என்பது குறித்து நடுநிலையாளர்கள் யோசிக்க வேண்டும்?

இந்தியாவில் படை எடுத்து வந்து நம்மை அடிமைப்படுத்தி மதமாற்றம் செய்து ஆலயங்களை அழித்து அட்டூழியங்களை செய்து அயோக்கிய வரலாறுகள் பல இருக்கிறது அதையெல்லாம் அரசாங்கம் ஆவணப்படுத்தி கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா?

இந்துக்கள் சிறுபான்மை யாகி இந்து அல்லாதவர்கள் பெரும்பான்மை ஆனால் அந்தப்பகுதி என்ன ஆகும் என்பதற்குஇது உதாரணம்!

தமிழக அரசு உடனடியாக இந்த கல்வெட்டை அகற்றவேண்டும்இல்லை எனில் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக ஆகிவிடும்.

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

அனைவருக்கும் பொதுவான அரசு அனைத்து மக்களிடமும் வரிப்பணம் வாங்கும் அரசு ஒரு சார்பாக செயல்படுவது முறையல்ல !! இதற்கு வன்மையான கண்டனங்கள். தேசபக்தர்கள் நடுநிலையாளர்கள் இந்த விஷயத்தை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உதவ வேண்டும். ஊடகங்கள் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை இந்து தமிழர் கட்சி சார்பில் முன்வைக்கிறோம்! என்று ராம. ரவிக்குமார் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories