அறநிலையத்துறை ஊழியர்களுக்கு எப்படி வந்தது ரோசம்…?!

Published:

srivilliputhur temple workers e1537272422113 - 2026

அறநிலையத்துறையில் பணிபுரிபவர்களுக்கு, ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது! இராஜா, அவர்களைப் பற்றி கண்டபடி பேசிவிட்டாராம்! ஸ்ரீரங்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்!!

கோயில் சிலைகளை களவாணிகள் கொள்ளையடித்தபோது வராத ரோஷம்!

ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு நடக்கும் அநீதியைக் கண்டு கொதிக்காத ரோஷம்!

கோயில் நிலங்களை திருட்டுக் கும்பல் ஆக்கிரமித்து, கொள்ளையடிக்கும்போது வராத ரோஷம்!

பிறமதத்தவரை கோயில் பொறுப்புகளுக்கு நியமிக்கும்போது வராத ரோஷம்!

உண்டியல் வருமானத்தை எண்ணும்போது செய்யும் சேட்டைகளை கண்டு வராத ரோஷம்!

போலி கட்டண சீட்டுகளை விற்று காசு பார்க்கும்போது வராத ரோஷம்!

கோயில் வளாகங்களில் மது, மாது, வாது, சூது என்று அமோகமாக நடக்கும் குற்றங்களைக் கண்டும் வராத ரோஷம்!

போதிய வருவாய் இருந்தும், இறைவனுக்கு வேளாவேளைக்கு பூஜை, நைவேத்யம் நடக்காமல் கிடக்கும் நிலை கண்டு கொதிக்காத ரோஷம்!

முறையற்ற வழியில், சிறப்பு தரிசனத்திற்கு பக்தர்களை அழைத்து சென்று கையூட்டு பெறும்போது வராத ரோஷம்!

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இப்போது வந்திருக்கிறது! இதற்கு பெயர் ரோஷமில்லை! சாக்கடையில் பன்றிகள் எச்சத்திற்காக போடும் உருமல்!!

அறந்தவறி பிழைப்பு நடத்துவதைவிட, குஷ்டரோகியிடம் பிச்சை எடுத்து வாழலாம்! அறம் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்!!

நன்றாக இருக்க மாட்டீர்கள்

Sundararaman Serkadu Nagarajan

Related articles

Recent articles

spot_img