சபரிமலை பிரச்னை ஏன் மேலும் மேலும் மோசமடைகிறது?

sabarimalai lady - 2026
சபரிமலைக்குச் செல்ல முயன்ற பெண் மாதவி , பத்தனம்திட்டையில் தடுத்து நிறுத்தப் பட்டார்…

சபரிமலை பிரச்சனை ஏன் மேலும் மேலும் மோசம் அடைகிறது…? சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா கட்சியையும் குற்றம் சொல்பவர்கள் சிலவற்றை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கவில்லை என்கின்றனர்.

அவசர சட்டம் என்றால் ஒரு வெள்ளை பேப்பரில் சபரி மலைக்கு பெண்கள் போக அனுமதி இல்லை என எழுதி கையெழுத்து போடுவது கிடையாது. அதற்கென்று முறைப்படியான நடைமுறைகள் உள்ளன.

உச்ச நீதிமன்றம் என்பது ஒரு இயந்திரம். ஏற்கனவே உள்ள சட்டங்களை அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது மட்டுமே அதன் வேலை. உச்சநீதி மன்றத்திற்கு சபரிமலை ஐயப்பனையும் தெரியாது, உசிலம்பட்டியில் கஞ்சா விற்கும் குப்பனையும் தெரியாது.

அரசியல் சட்ட அடிப்படையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை போகலாம் என தீர்ப்பை எழுதி அதன் கடமையை உச்சநீதி மன்றம் முடித்து விட்டது.

சரி, சட்டத்தை திருத்துவதில் என்ன பிரச்சனை என கேட்கலாம்.

சபரிமலை விவகாரம் மத்திய அரசின் அதிகார வரம்பில் இல்லை. அது மாநில அரசின் அதிகார வரம்பில் வருகிறது. மக்களின் உணர்வுகளுக்கும், பாரம பரியத்திற்கும் எதிரான தீர்ப்பு எனில் சம்பந்தப்பட்ட மாநில அரசு தான் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலில் சட்டமன்றத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். நீதிமன்ற தீர்ப்பினால் ஏற்பட்ட, ஏற்படப்போகும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்களின் எதிர்ப்பு என தலைமைச்செயலரின் அறிக்கையுடன் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

சம்பந்தப்பட்ட மத்திய அரசின் துறைகள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். பின் பிரதமர் தலைமையிலான மத்திய கேபினட் அதை முறைப்படி பரிசீலித்து அவசர சட்டமாக்கி உத்தரவிடும்.

இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்ததும் அது நடைமுறைக்கு வரும். தமிழகத்தின் ஜல்லிக்கட்டு இப்படித்தான் அவசர சட்னத்தின் மூலம். மீட்கப்பட்டது.

கேரளாவில் நடப்பது என்ன…? மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட கேரளா அரசு சிறப்பு சட்ட மன்ற கூட்டத்தை உடனடியாக கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்ப வேண்டும். அந்த தீர்மானத்தை அடிப்படையாக வைத்தே மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பிக்க முடியும்.

கேரள அரசு கம்யூனிஸ்ட்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. சபரி மலையின் புனிதத்தை காக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை இருந்தால் சட்டமன்றத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி பிரச்சனை இரண்டே நாளில் முடிவுக்கு வந்திருக்கும்.

ALSO READ:  தமிழகத்தின் ‘மக்கள் ஆளுநர்’!

இந்த இடத்தில் கம்யூனிஸ்ட் தனது மாநில அரசின் அதிகாரத்தை வைத்து சபரிமலை விவகாரத்தில் இந்துக்களிடம் வித்தை காட்டி வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியே தீருவோம என இந்துக்களுக்கு எதிராக முண்டா தட்டி நிற்கிறது. ஏனெனில் மாநில அதிகாரம் அவர்கள் கையில் உள்ளது. அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு சபரி மலை புனிதம் காக்கப்பட வேண்டுமா அல்லது உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டுமா என்கிற முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் கம்யூனிஸ்ட்கள் கையில் உள்ளது. அவர்கள் பெண்களை அனுமதித்தே ஆக வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளனர்.

இதில் மத்திய அரசு கண்டிப்பாக தலையிட முடியாது. இன்னும் தெளிவாக சொன்னால் சபரி மலையில் பெண்களை அனுப்ப ராணுவத்தின் உதவி தேவை என கம்யூனிஸ்ட் கோரினால் மத்திய அரசு அனுப்பித்தான் ஆக வேண்டும்.

சரி கேரள மாநில அரசை டிஸ்மிஸ் செய்யலாமே என கேட்கலாம். சப்பை காரணங்களை சொல்லி மாநில அரசை கலைப்பது இந்திரா காந்தி,, ராஜீவ் காலத்தோடு முடிந்து விட்டது.

கர்நாடகாவில் எஸ்.ஆர். பொம்மை அரசு கலைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தெளிவாக அதற்கு ஆப்பு வைத்துள்ளது. மாநில அரசை கலைத்தால் நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

கேரளா அரசை கலைத்தால் என்ன காரணத்தை சொல்ல முடியும்…? உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியதால் கலைத்தோம் என பதில் சொன்னால் காறி துப்புவார்கள். டிஸ்மிஸ் செய்தது செல்லாது என உச்சநீதிமன்றமே சொல்லி விடும்.

இதனால் கேரள அரசை கலைக்கவும் முடியாது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என இருந்தால் மட்டுமே கலைக்க முடியும்.

முல்லை பெரியாறு போன்று பல பிரச்சனைகளில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் அல்வா கொடுத்த கேரளா சபரிமலை விவகாரத்தில் மட்டும் உடனடியாக அமல்படுத்தியே தீருவோம் என மல்லுக்கட்ட காரணம் என்ன….?

அங்கு தான் அரசியல் உள்ளது. கேரளத்தில் இந்துக்களின் சதவிகிதம் 54.73%

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை 45% அளவில் உள்ளது. அதாவது கிட்டத்தட்ட பாதி அளவிற்கு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள்.

இப்போது இதை அப்படியே வைத்து விட்டு இந்திய அரசியலை சற்று கவனிக்கவும். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கும் ஒவ்வொரு மாநிலமாக அதன் பிடி தளர்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் ஒற்றைக் கட்சியாக பாரதிய ஜனதா விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

ALSO READ:  Videsi se Desi: A New Era of Secure and Aatmanirbhar Digital Communication!

சென்ற நாடாளுமன்ற தேர்தலில் இப்போதைய காங்கிரஸ், கம்னியூஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பிரச்சாரம்… மோடி பிரதமரானால் மைனாரிட்டி மக்கள் வாழ முடியாது, குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் போல இந்தியா முழுக்க நடக்கும் என்றே பிரச்சாரம் செய்தனர்.

பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு அப்படி எதுவும் நடக்கவில்லை. கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு வந்த வெளிநாட்டு நிதியுதவிகள் தடுத்து நிறுத்தப் பட்டு விட்டது. காங்கிரஸ் ஆட்சியில் தடையின்றி நடத்தப்பட்ட மதமாற்றங்கள் இப்போது தொண்டு நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்ததும் கத்தி கதறுகின்றன.

ஆட்சியில் ஏதாவது குறை கூறவும் வழியில்லை. ஏதாவது செய்து பிரதமர் மோடிக்கு எதிராக மக்களை திரட்ட வேண்டிய கட்டாயத்திற்கு சென்று விட்டனர். அதனால் தான் இவர்களே சாதாரன உள்ளூர் பிரச்சனைகளை கூட அளவில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்திய அளவிலும், உலக அளவிலும் கொண்டு செல்கின்றனர்.

இந்த திட்டத்தின் படி எழுதப்பட்டது தான் காஷ்மீர் ஆஸிபா கதை, பிரதமர் மோடி தினமும் பத்து லட்சம் ரூபாய்க்கு கோட் அணிகிறார் கதை, பிரதமர் மோடி தினமும் பத்து லட்சம் ரூபாய்க்கு காளான் உணவை சாப்பிடுகிறார் கதைகள்.

பொய்கள் ஆரம்பத்தில் பரபரப்பக பேசப்படும். ஆனால் சீக்கிரம் பிசுபிசுத்து விடும் என்பது இயற்கை. இவர்களின் பித்தலாட்டங்களும் இப்படித்தான் விரைவிலேயே வெளியாகி அசிங்கப்பட்டனர்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் மத்திய அரசுக்கு எதிராக ரேபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் என்று பலமாக ஊளையிட்டனர். அதுவும் ஆரம்பத்தில் பரபரப்பாக மக்களிடத்தில் விவாதிக்கப் பட்டாலும் அந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு சாராம்சமாக மக்களை சென்றடைந்த பின் குற்றச்சாட்டு சொன்னவர்களையே மக்கள் கோமாளிகளாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

எதுவுமே வேலைக்காகவில்லை எனில் எதை சொல்லி நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது….? இதற்குத்தான் சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

சபரி மலை விவகாரத்தை சிக்கலாக்குவதால் காங், கம்யூ உள்ளிட்ட எதிர் கட்சிகளுக்கு என்ன லாபம்…? அதையும் பார்க்கலாம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காட்டி எந்த உண்மையான இந்து பக்தையும் இதுவரை சபரிமலை செல்லவில்லை. இனி செல்லப் போவதும் இல்லை என்பது தான் நிதர்சனம். ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய அப்படி இப்படி இருக்கும் நவீன யுவதிகளை மலையேற்றுவதன் மூலம் இந்துக்களின் மனதில் மதவெறி திணிக்கப்படுகிறது.

ALSO READ:  கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

இந்து பெண்களே போகாத ஐயப்பன் கோவிலில் வேற்றுமத பெண்களுக்கு என்ன வேலை என இந்துக்கள் கொதிப்பார்கள். தங்கள் மத பெண்கள் சபரிமலைக்கு போவதை எந்த முஸ்லிம், கிறிஸ்தவனும் இதுவரை கண்டிக்காததை கவனித்துப் பார்த்தால் புரியும்.

இந்து தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட பிரசாதங்களையே தொட மாட்டார்கள். அவர்கள் குடியிருக்கும் தெரு வழியே இந்து மத ஊர்வலங்கள் வந்தாலே ரகளையில் ஈடுபடும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் மத பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு போவதை பற்றி வாயே திறக்காத மர்மம் என்ன…?

தெளிவான திட்டமிடல் இது. வேற்று மத பெண்களை கோவிலுக்கு பாதுகாப்பு கொடுத்து கொண்டு போவதின் மூலம் இந்துக்களை வெறியேற்றி கலவரத்தில் ஈடுபட தள்ளுவது தான் இவர்களின் திட்டம்.

எதிர்பார்த்தபடி சபரிமலை சென்ற பெண்களின் வீடுகளை இந்துக்கள் அடித்து உடைத்துள்ளனர். இது மேலும் வளர்ந்து அந்த பெண்களின் மத வழிபாட்டு தலங்களான மசூதிகளும், தேவாலயங்களும் தாக்கப்படும். பிறகு என்ன மதக்கலவரம் பற்றிக் கொள்ளும். கேரளாவை பொறுத்தவரை மைனாரிட்டி மக்கள் சரிபாதி அளவுக்கு இருப்பதாலும், அவர்களுக்கு ஆதரவாக ரத்த வெறி பிடித்த கொலைகார கம்யூனிஸ்ட் அரசும் இருப்பதால் குஜராத்தின் கோத்ராவை விட மோசமான மத கலவரம் நடக்கும்.

கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பது இதைத்தான். கலவரம், அதன் பாதிப்பு, படுகொலை அனைத்தும் மத்திய அரசின் தலையில் வைக்கப்பட்டு ஊடகங்களின் உதவியுடன் மக்களிடம் கொண்டு செல்லப்படும். இந்தக் கலவரம் சர்வதேச அளவில் கொண்டு செல்லப்பட்டு இந்தியாவில் மைனாரிட்டி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என பலமான வாதம் வைக்கப்படும்.

கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் சொல்ல முடியாமல் தோற்றதால் வரும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு சபரிமலை விவகாரத்தில் அரசியல் சித்து விளையாட்டை கையில் எடுத்துள்ளனர் என்பதே உண்மை. அவர்களுக்கு தேவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வலுவான ஒரு பிரச்சனை. அதை ஐயப்பனை மையமாக வைத்து உருவாக்குகின்றனர்.

– Bommaiyah Selvarajan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories