December 5, 2025, 10:03 PM
26.6 C
Chennai

வளர்ந்த நாடுகளே கைவிடும் போது… இந்தியா மட்டும் ‘நீட்’டில் பிடிவாதம் பிடிப்பது ஏன்?!

s.gurumurthy - 2025

கேள்வி : பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளே மருத்துவ படிப்பில் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று கருதும்போது இந்தியா மட்டும் அதை கட்டாயப்படுத்துவதேன் ? என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளாரே ?..

எஸ்.குருமூர்த்தி பதில் : பிரிட்டன் என்பது ( கல்வி, மொழி எதிலும் ) பன்முகத் தன்மை இல்லாத – மாநிலங்களாக பகுதிப்படுத்தப்படாத – ஒரே நாடு..அதன் மொத்த மக்கள் தொகை தமிழகத்தை விடக் குறைவு.

நம் நாடோ அருணாச்சல பிரதேசத்திலிருந்து தமிழகம் வரை 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொண்ட, ஏராளமான மொழிகள், கல்வி முறைகள் நிறைந்த , பிரிட்டனைப் போல் 20 மடங்கு மக்கள் தொகை கொண்ட நாடு. இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. பாலுவின் வாதம் அடிப்படையிலேயே தவறு.

நம் நாட்டு மக்களை திசை திருப்பும் பாலு போன்ற அரசியல்வாதிகள் பல உண்மைகளை அறியாமல் பேசுகிறார்கள்.. நம் நாட்டு மருத்துவப் படிப்பையே இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்பதில்லை என்பது அவர்களுக்கு தெரியாது போல இருக்கிறது.

எனவே , நம் நாட்டு மருத்துவர்கள் அங்கு மருத்துவம் செய்யும் உரிமை பெற , அங்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வு எழுதி, தகுதி பெற வேண்டும். பாகிஸ்தான் மருத்துவர்களுக்கு அங்கு தகுதித் தேர்வு கிடையாது. நம் மருத்துவர்களுக்கு உண்டு. இது அவமானம்.

இதற்கு காரணம் நம் மருத்துவக் கல்வி தரம் குறைவு என்று அவர்கள் கருதுவதுதான். இதையெல்லாம் மாற்றத்தான் நீட் போன்ற நுழைவுத் தேர்வு முறை அவசியமாகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகள் கூட எய்ம்ஸ், வேலூர் சி.எம்.சி, ஜிப்மர், பி.ஜி.ஐ. சண்டிகர் போன்ற சில பெயர் பெற்ற கல்லூரிகளில் படித்த மருத்துவர்களைத் தான் அங்கு மருத்துவம் செய்ய அனுமதிக்கிறார்கள்.

நம் நாட்டில் பெறும் மருத்துவ படிப்பு மற்ற நாடுகளில் மருத்துவம் செய்ய (நீட் போன்ற) நுழைவுத் தேர்வில் அமரத்தான் உதவுமே தவிர , நேரடியாக அங்கு மருத்துவம் செய்யும் உரிமையை பெற்றுக் கொடுக்காது. எனவே, நமது மருத்துவ படிப்பின் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

துக்ளக் 17.07.2019 இதழிலிருந்து…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories