Monthly Archives: April, 2018
நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில்..!
டவுன்லோட் செய்த ஹால் டிக்கெட்டில், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, தேர்வறைக்குக் கொண்டு வர வேண்டும்.
அனுமதி இல்லாமல் ‘தாத்தா’ தட்டினாலும் தப்பு: பொங்கிய பெண் நிருபர் கன்னத்தைக் கழுவிக் கழுவித் துடைத்தாலும் அடங்கவில்லை!
தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபரின் அதுவும் ஒரு பெண்ணின் கன்னத்தை அவரது அனுமதி இல்லாமல் தொடுவது முறையான நடத்தை அல்ல. என்னுடைய முகத்தை நான் பல முறை கழுவி விட்டேன். இருந்தாலும் என்னால் அதில் இருந்து மீள முடியவில்லை. அதனால் கோபமும் ஆத்திரமும் அடைந்தேன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உங்களுக்கு வேண்டுமானால் இது ஒரு தாத்தாவைப் போன்ற அணுகுமுறையாக இருக்கலாம். என்னைப் பொருத்தவரை அது தவறு
இதயத்தில் உள்ளது காவிரி! மேலாண்மை வாரியம் விரைவில் அமையும்! : ஆளுநர் கொடுத்த நம்பிக்கை!
“காவிரி விவகாரம் என் இதயத்தில் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தை நான் மேலிடத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்றேன். எப்போதெல்லாம் நான் தில்லி செல்கிறேனோ அப்போதெல்லாம் நான் காவிரி விவகாரம் குறித்து பேசுகிறேன்.
எனக்கு கொள்ளுப் பேரனே உள்ளார்: நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் கூறிய விளக்கங்கள்!
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், இன்று மாலை 6 மணி அளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
ஏப்.28 வரை பேராசிரியை நிர்மலா தேவிக்கு நீதிமன்றக் காவல்!
இந்நிலையில் இன்று மாலை பேராசிரியை நிர்மலா தேவி விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.
குற்றச்சாட்டுகளுக்கு என்ன விளக்கங்கள் சொல்கிறார் ஆளுநர்?!
விசாரணை அறிக்கை கிடைத்தபின் அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட என்னை அணுக முடியாது - என்றார் ஆளுநர்.
மே 17ல் ஆஜராகி விளக்கம் அளிக்க ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நாடாளுமன்ற குழு சம்மன்
முன்னதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், தனியார் வங்கிகளைக் காட்டிலும் தேசிய மயமாக்கப் பட்ட பொதுத் துறை வங்கிகள் மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் மிகவும் தளர்வாக இருப்பதாக் கூறியிருந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்த விவகாரத்தில் பதிலளித்த போது அவர் இதனைக் கூறியிருந்தார்.
இரட்டை இலை சின்னம் குறித்த டிடிவி வழக்கு: 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
இதில் கே.சி.பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக., பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், பொதுச் செயலாளர் விவகாரத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் வாதாடினார்.
காவிரி விவகாரத்தில்… நடிகர் ரஜினி காந்த் திடீர் முடிவு!
இப்படி ஒருவரை மன வேதனைப் படுத்தி வாய்மூடி மௌனமாக்குவதுதானே பாரதிராஜா போன்ற கருத்துச் சுதந்திரப் பேர்வழிகளின் வேலை என்பது ரஜினிக்கு தெரியாமல் போய்விட்டது என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்!
இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து விளக்குகிறார் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்
இத்தகைய சூழலில் அவர் மீது குற்றம் சுமத்தி, ஆளுநரை வெளியேற்ற பல்வேறு சதிவலைகளை ஆளுநர் மாளிகையில் இருப்போர் உள்பட அரசியல்வாதிகள் பின்னி வரும் நிலையில், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா ஆளுநர் பெயரை இழுத்து மோசமான குற்றச்சாட்டை சுமத்துகின்ற வேலையில் இறங்கியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், ஆளுநர் இன்று மாலை பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
நிர்மலா தேவி விவகாரத்தில் திடீர் திருப்பங்கள்…! என்னதான் நடக்கிறது மேல் மட்டத்தில்?!
முன்னதாக, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற புகாரில் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இந்நிலையில், அவரிடம் இருந்து அவர் பயன்படுத்தி வந்த 3 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
நாட்டையே உலுக்கும் திடீர் பணத் தட்டுப்பாடு: எதிர்க்கட்சிகள் புகார்; ஜேட்லி விளக்கம்; மக்கள் அவதி!
இருப்பினும் சாமானிய மனிதன் இதனால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறான் என்பதும், வங்கி நிர்வாகம் மற்ற துறைகளைப் போல் துடிப்புடன் இல்லை, கருப்பு ஆடுகள் புகுந்து சீர்கெட்டு விட்ட நிர்வாகமாக வங்கி நிர்வாகம் ஆகிப் போயுள்ளது என்றும், குற்றச்சாட்டுகள் முவைக்கப் படுகின்றன.
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.