சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அதன் தொகுப்பு!
தமிழக ஆளுநராக பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவுபெற்று பெற்றுள்ளது. பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. விசாரணை ஆணையர் சந்தானம் விரிவாக விசாரணை செய்து அறிக்கை அளிப்பார். மாணவிகளை தவற வழி நடத்தியது கண்டனத்துக்குரியது.
நான் நிர்மலா தேவி முகத்தை கூட இதுவரை பார்த்தது இல்லை; எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட என்னை அணுக முடியாது! எனக்கு 78 வயது ஆகிறது; எனக்கு பேரன், பேத்திகள் உள்ளனர்.
என்னை பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம். சந்தானம் விசாரணை கமிஷனால் போலீஸ் விசாரணையில் பாதிப்பு இல்லை. காவல்துறை விசாரணை தனியாக நடக்கட்டும்.
பல்கலைக் கழகங்களின் வேந்தர் அலுவலகம் ஒரு தனிச்சட்டதிகாரம் கொண்ட அலுவலகம். ஆளுனராக அல்ல வேந்தராக விதிமுறைகளின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடமுடியும்.
பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிக்கச் செல்கிறேன். பலபேர் என்னோடு படமெடுத்துக் கொள்கிறார்கள். எனக்கு பேரன் அல்ல கொள்ளுப்பேரன் இருக்கிறார். என்னைத் தவறாகப் பேச வேண்டாம்.
விசாரணை அறிக்கை கிடைத்தபின் அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட என்னை அணுக முடியாது – என்றார் ஆளுநர்.