December 5, 2025, 6:38 PM
26.7 C
Chennai

காவிரி விவகாரத்தில்… நடிகர் ரஜினி காந்த் திடீர் முடிவு!

rajini mgr stature - 2025

காவிரி விவகாரத்தில் ரஜினி காந்த் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இனி எக்காரணம் கொண்டும் காவிரி விவகாரத்தில் வாய் திறப்பதில்லை என்றும், மௌனத்தைக் கடைப் பிடிக்கலாம் என்றும் ரஜினி காந்த் முடிவு எடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அண்மையில் சென்னையில் பெரும் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் ஆகியவை நடைபெற்றன. குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராட்டத்தை நடத்தி வரும் இளைஞர்களின் கவனம் போராட்டத்தில் இருந்து திசை திரும்பி கிரிக்கெட் பக்கம் சென்று விடக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள்.

அதனால், போராட்டத்தை நடத்தியவர்கள் தங்கள் தரப்புக்கு ஆதரவு அதிகம் இருப்பதாகக் காட்டுவதற்காக, ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று கோரினர். மேலும், ஐபிஎல் போட்டிகள் நடந்த சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் போட்டிகளைக் காண வந்த சென்னை அணி ரசிகர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, போலீஸாரையும் தாக்கி காயப் படுத்தினர். இந்தச் செயல்களைக் கண்டு தமிழகமே அதிர்ச்சி அடைந்தது.

rajinikanth - 2025

இந்த நிலையில், போலீஸாரை கொலைவெறியுடன் தாக்கி காயப் படுத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த எத்தனையோ லட்சம் மக்களைப் போல், தற்போது புதிதாக அரசியல் களத்தில் காலடி வைத்துள்ள நடிகர் ரஜினி காந்தும் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து, போலீஸாரை கொலை வெறியுடன் தாக்கும் நாம் தமிழர் கட்சித் தொண்டர் குறித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதுடன், வன்முறையின் உச்சக்கட்டம் இது, காவலர்கள் மீது கை வைப்பதை அனுமதிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார். இதை தடுக்க கடுமையான சட்டம் தேவை என்றும் கூறியிருந்தார்.

இதனால், நாம் தமிழர் கட்சியினரின் வன்முறைகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டவர்கள், நடிகர் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர். அந்த விமர்சனத்தின் உச்சக்கட்டமாக, ரஜினி கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்று விமர்சித்தார். பாரதிராஜாவின் கண்மூடித்தனமான தரம் தாழ்ந்த விமர்சனத்தால் கடுமையான மன வேதனை அடைந்த ரஜினிகாந்த், காவிரிப் பிரச்னை தொடர்பாக இனி எந்த விதமான கருத்தும் தெரிவிப்பதில்லை என முடிவெடுத்தாராம்.

இப்படி ஒருவரை மன வேதனைப் படுத்தி வாய்மூடி மௌனமாக்குவதுதானே பாரதிராஜா போன்ற கருத்துச் சுதந்திரப் பேர்வழிகளின் வேலை என்பது ரஜினிக்கு தெரியாமல் போய்விட்டது என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories