March 20, 2025, 9:32 AM
31 C
Chennai

காவிரி விவகாரத்தில்… நடிகர் ரஜினி காந்த் திடீர் முடிவு!

காவிரி விவகாரத்தில் ரஜினி காந்த் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இனி எக்காரணம் கொண்டும் காவிரி விவகாரத்தில் வாய் திறப்பதில்லை என்றும், மௌனத்தைக் கடைப் பிடிக்கலாம் என்றும் ரஜினி காந்த் முடிவு எடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அண்மையில் சென்னையில் பெரும் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் ஆகியவை நடைபெற்றன. குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராட்டத்தை நடத்தி வரும் இளைஞர்களின் கவனம் போராட்டத்தில் இருந்து திசை திரும்பி கிரிக்கெட் பக்கம் சென்று விடக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள்.

அதனால், போராட்டத்தை நடத்தியவர்கள் தங்கள் தரப்புக்கு ஆதரவு அதிகம் இருப்பதாகக் காட்டுவதற்காக, ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று கோரினர். மேலும், ஐபிஎல் போட்டிகள் நடந்த சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் போட்டிகளைக் காண வந்த சென்னை அணி ரசிகர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, போலீஸாரையும் தாக்கி காயப் படுத்தினர். இந்தச் செயல்களைக் கண்டு தமிழகமே அதிர்ச்சி அடைந்தது.

இந்த நிலையில், போலீஸாரை கொலைவெறியுடன் தாக்கி காயப் படுத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த எத்தனையோ லட்சம் மக்களைப் போல், தற்போது புதிதாக அரசியல் களத்தில் காலடி வைத்துள்ள நடிகர் ரஜினி காந்தும் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து, போலீஸாரை கொலை வெறியுடன் தாக்கும் நாம் தமிழர் கட்சித் தொண்டர் குறித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதுடன், வன்முறையின் உச்சக்கட்டம் இது, காவலர்கள் மீது கை வைப்பதை அனுமதிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார். இதை தடுக்க கடுமையான சட்டம் தேவை என்றும் கூறியிருந்தார்.

இதனால், நாம் தமிழர் கட்சியினரின் வன்முறைகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டவர்கள், நடிகர் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர். அந்த விமர்சனத்தின் உச்சக்கட்டமாக, ரஜினி கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்று விமர்சித்தார். பாரதிராஜாவின் கண்மூடித்தனமான தரம் தாழ்ந்த விமர்சனத்தால் கடுமையான மன வேதனை அடைந்த ரஜினிகாந்த், காவிரிப் பிரச்னை தொடர்பாக இனி எந்த விதமான கருத்தும் தெரிவிப்பதில்லை என முடிவெடுத்தாராம்.

இப்படி ஒருவரை மன வேதனைப் படுத்தி வாய்மூடி மௌனமாக்குவதுதானே பாரதிராஜா போன்ற கருத்துச் சுதந்திரப் பேர்வழிகளின் வேலை என்பது ரஜினிக்கு தெரியாமல் போய்விட்டது என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

Entertainment News

Popular Categories