December 5, 2025, 2:32 PM
26.9 C
Chennai

காந்திஜியின் 150 வது பிறந்தநாள்! மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!

ganthi - 2025

மகாத்மா காந்தி குறித்து, கல்வி நிறுவனங்களில், ஓர் ஆண்டுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின், 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அடுத்த மாதம், 2ம் தேதி முதல், 2020 அக்., 2 வரை, நாடு முழுவதும், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, பள்ளிகளுக்கு, தமிழக பள்ளி கல்வியின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

காந்தியடிகளின், 150வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், வரும், 23 முதல், அக்., 2 வரை, காந்திய மதிப்புகள் சார்ந்து, பல்வேறு செயல்பாடுகளை முதற்கட்டமாக, மேற்கொள்ள வேண்டும்.

இந்த செயல்பாடுகளை, 2020 அக்., 2 வரை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வரும், 23ல், சர்வமத பிரார்த்தனை; 24ல், பாட்டு, நாடகம், ஓரங்க போட்டி; 25ல், துாய்மை விழிப்புணர்வு பேரணி; 26ல், பேச்சு போட்டி, கதைகள் கூறுதல், பட்டிமன்றம்; 27ல், கவிதை, கட்டுரை போட்டிகள்; 28ல், ஓவிய போட்டி; 30ல், காந்தியடிகளுடன் தொடர்புடைய இடங்களை பார்வையிடுதல் போன்றவற்றையும் நடத்த வேண்டும்.
அக்டோபர், 1ல், மாணவர்கள், பெற்றோருக்கு வினாடி வினா; அக்., 2ல் காந்தி ஜெயந்தி விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதன்பின், மொத்தம் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும், 2020 அக்., 2 வரை, ஓர் ஆண்டுக்கு நடத்த வேண்டும்.இவ்வாறு, சுற்ற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதற்கட்ட நிகழ்ச்சிகளை நடத்தும், வரும், 23 முதல், அக்., 2 வரை, பள்ளி மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு விடுமுறை காலம். இந்த கால கட்டத்தில், என்.எஸ்.எஸ்., எனப்படும், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு, நலப்பணி முகாம்கள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories