December 6, 2025, 9:05 AM
26.8 C
Chennai

நாம் என்ன நினைக்கிறோமோ… அதுவாகவே ஆவோம்! : அமைச்சர் விஜயபாஸ்கரின் தத்துவ விளக்கம்!

mr vijayabhaskar - 2025

நம் உள்மனதில் என்ன நினைக்கிறோமோ அதை போல ஆவோம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பேசினார்.

கரூர் தனியார் திருமண மண்டபத்தில் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் அச்சமின்றி பொதுத் தேர்வை எதிர்கொள்வதற்கான சிறப்பு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம். ஆர். வி. டிரஸ்ட் மூலம் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

25 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு மாதிரி வினா தொகுப்பு ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் குறிப்பேடு, மரக்கன்றுகளை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வியை தாண்டி வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும்… என்றார்.

அவர் மேலும் பேசியபோது… ஒழுக்கத்தையும், சுற்றுச்சூழலையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் . சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம் என்பதற்கு எனது வாழ்க்கையில் ஒரு உதாரணம் சொல்கிறேன்…

நான் வெளிநாடு செல்கையில் ரயில் பயணத்தின்போது வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு பழத் தோலை வெளியில் வீசினேன் ஆனால் அருகில் இருந்த ஒரு சிறுமி சாக்லேட் சாப்பிட்டுவிட்டு சாக்லெட் பேப்பரை 200 மீட்டர் தள்ளி இருந்த குப்பைத் தொட்டியில் கொண்டு சென்று போட்டார். அப்பொழுது மிகப்பெரிய ஒரு வாழ்வியல் பாடத்தைக் கற்றுக் கொண்டேன் .. அதிலிருந்து நான் குப்பையை ரோட்டில் வீசி எறிய மாட்டேன்.

நீ என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்றார் விவேகானந்தர்! அதைப்போல நான் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக ஆவேன் என்று நண்பர்களிடம் கூறினேன்! ஆனால் அவர்கள் என்னிடம் கிண்டல் செய்தார்கள்! ஆனால் நான் தற்போது அமைச்சராக ஆகி உள்ளேன்! நம் உள்மனதில் என்ன நினைக்கிறோமோ அதை போல ஆவோம் என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories