பிளஸ் 2: மறுத்தேர்வு குறித்து இன்று அறிவிப்பு! செங்கோட்டையன்!

sencottaian

பிளஸ் 2 கடைசி தேர்வை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவடையும் சமயத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதற்குள்ளாக கொரோனாத் தொற்று பீதி அதிகமானதால் கடைசித் தேர்வை 34,482 பேர் எழுதவில்லை. எனவே, இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால், இவர்களுக்கு மீண்டும் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்க தயாராக உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், கொரோனா பீதி இன்றும் அகலாத நிலையில் இவர்களுக்கு தேர்வு நடத்த முடியவில்லை.

தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள சூழலில் 34 ஆயிரம் பேரில் 718 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிட முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.

ஜூலை 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் தேர்வு எழுத தவறிய 34 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “கொரோனா அச்சம் காரணமாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத 34 ஆயிரம் மாணவர்களின் வசதிக்காக மீண்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது.

தேர்வு நடைபெறும் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும். தற்போது 34 ஆயிரம் பேரில் 718 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 34 ஆயிரம் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். தேர்வு முடிந்த நான்கு நாட்களில் பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்படும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories