புது தில்லி: தொலைதூரக் கல்வி மூலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் நடத்துவதற்கு பல்கலைக் கழக மானியக் குழு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பல்கலை மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள அறிக்கை: தொலைதூர கவுன்சில்(டெக்) அமைப்பின் பணிகள் பல்கலைக் கழக் மானியக் குழுவின் (யுஜிசி) கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து தொலைதூரக் கல்வித் திட்டத்தில் வழங்கப்படும் படிப்புகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக எந்த ஒரு பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகம், எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளைத் தவிர தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பிற தொழி்ல்நுட்பப் பாடங்கள் மற்றும் பட்டயப் படிப்புகளை நடத்தக் கூடாது. மீறினால் யுஜிசி அல்லது ஏஐசிடிஇ நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
தொலைதூரக் கல்வியில் பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகள் நடத்த யுஜிசி தடை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

