சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 19 செவ்வாய் நாளையுடன் நிறைவடைகின்றன.
மார்ச்1 ஆம் தேதி பிளஸ் 2 பொது தேர்வுகள் தொடங்கின. ஒவ்வொரு பாடத்துக்கும்
மாணவர்கள் தயாராகும் வகையில் போதிய நாட்கள் இடைவெளி விட்டு தேர்வுகள்
நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு வாரமாக நடந்து வரும் பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் நிறைவு பெறுகின்றன. நாளை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, அக்கவுன்டன்சி பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தொழிற்கல்வி மாணவர்களுக்கு மார்ச் 15ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து விட்டன.