December 5, 2025, 3:45 PM
27.9 C
Chennai

இங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே!

29. ingitham - 2025

பார்ஷியாலிடியை தவிர்த்தால் ஃபேஸ்புக் நட்பில் மோதல்களைத் தவிர்க்கலாம்…

ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் பதிவுகளுக்கு எத்தனையோ பேர் கமெண்ட் செய்திருப்பார்கள். பலர்  பேர் லைக் செய்திருப்பார்கள். ஒருசிலர் படித்து ரசிப்பார்கள். லைக்கும் கமெண்டும் போடுவதற்கு தயங்கி கடந்து செல்வார்கள்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

நம் பதிவு பயனுள்ளதாக இருந்தால் அவை மேடை பேச்சுகளிலும், விழா மேடைகளிலும், கல்விக்கூடங்களிலும் என எங்கேனும் எடுத்தாளப்பட்டுக் கொண்டிருக்கும். 

எனவே தொடர்ச்சியாக ஃபேஸ்புக்கில் பதிவிடும் நண்பர்கள் கமெண்ட்டுகள், லைக்குகள் குறித்து கவலைப்படாமல் எழுதிக்கொண்டே இருங்கள்.

ஆனால் உங்கள் பதிவுக்கு உங்கள் மனதுக்குப் பிடித்த எழுத்தாளர்களோ, ஓவியர்களோ அல்லது இன்னபிற துறைசார்ந்த பிரபலங்களோ கமெண்ட் செய்திருந்தால் அதை மட்டும் குறிப்பிட்டு  ‘இன்னார் எனக்கு கமெண்ட் செய்திருந்தார்… மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ என அதைத் தனிப்பதிவாக போட்டு உங்கள் பதிவுக்கான மதிப்பைக் கூட்டுவதாக நினைத்து உங்களை நீங்களே கீழே இறக்கிக்கொள்ள வேண்டாம்.

உங்கள் பதிவுக்கு கமெண்ட், லைக் செய்திருந்த ஒவ்வொருவருமே அதி முக்கியமானவர்கள்.

எனவே யாரையும் தனியாகக் குறிப்பிட்டு (அவர்கள் எத்தனை பெரிய பிரபலமாக இருந்தாலும்…) நன்றி தெரிவிக்காமல் இருப்பது உங்கள் மீதான மதிப்பைக் கூட்டும்.

பொதுவெளியில் எழுதும் பதிவுகளுக்கு பொதுவில் கமெண்ட் செய்யும் அன்பர்கள் அனைவருக்கும் பொதுவில் நன்றி தெரிவிக்க வேண்டும். ‘பார்ஷியாலிட்டி’ வேண்டாமே!

சமையல் செய்யும்போது காரம் அதிகம் சாப்பிடாதவர்களுக்காக காரம் போடாத காயை தனியாக எடுத்து வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு கொஞ்சம் காரம் கூடுதலாய் சேர்ப்பதைப் போல… உங்கள் அபிமானவர்களுக்கு உங்கள் நன்றியையும், மகிழ்ச்சியையும் ‘சற்றுக் கூடுதலாக’ தெரிவிக்க விரும்பினால் தனியாக மெசஞ்சர், வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்.

லைக்கும் கமெண்ட்டும் செய்யும் அன்பர்களை / வாசகர்களை தக்க வைத்துக்கொள்ளவும், அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கவும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது ஒன்றுதான்.

அதுபோல ஒருவரின் ஃபேஸ்புக் பதிவுகளை எடுத்தாள்பவர்கள் யாருடைய பதிவை எடுத்தாள்கிறார்களோ அவர்களின் பெயரை மறக்காமல் குறிப்பிட்டு அவர்களுக்கு கிரெடிட் கொடுப்பதுதான் அவர்களின் படைப்புக்கு கொடுக்கும் மரியாதை. 

ஃபேஸ்புக்கிலேயே பகிர நினைத்தால் அப்படியே ஷேர் செய்யுங்கள். காப்பி பேஸ்ட் வேண்டாம்.

இதுபோல சின்ன சின்ன விஷயங்கள் ஃபேஸ்புக் நட்புகளில் ஏற்படும் மோதல்களை தவிர்க்க உதவும்.

– காம்கேர் கே. புவனேஸ்வரி

கட்டுரையாளர் குறித்து…

This image has an empty alt attribute; its file name is bhuvaneswari-compcare.jpg

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்

ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டு வருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர்  மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. For More Info.. http://compcarebhuvaneswari.com/ http://compcaresoftware.com/

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories