நீட் தேர்வு நிறைவு! தமிழகத்தில் 14 நகரங்களில்..! நெல்லையில் 974 பேர் ஆப்செண்ட்!

Published:

neet - 2026
மதுரை: அழகர் கோவில் பகுதியில் நீட் தேர்வுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மாணவர்கள்.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று மாலை முடிவடைந்தது.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் 14 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. #NEET | #NEET2019

இதனிடையே, நீட் நெல்லை 15 மையங்களில் தேர்வு எழுதியோர் 7301 பேர் என்றும், இதில், ஆப்சன்ட்-974 பேர் என்றும் தகவல் வெளியானது. நீட் தேர்வுக்காக எழுத காத்திருந்தோ மொத்தம் 8275 பேர். ஆயினும், தேர்வு மையம் குழப்பம், மதுரைக்கு மாற்றப் பட்டது என பல்வேறு காரணங்களால், தேர்வு எழுத இயலாமல் போனவர்கள் அதிகம் என்று குற்றம் சாட்டியுள்ளனர் பெற்றோர்.

தமிழகத்தல் நீட் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் தற்போது விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மாணவ மாணவிகள் குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வந்து சங்கடங்களைத் தவிர்த்தனர்!

நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், முழுக்கை சட்டை அணியக் கூடாது என தேசிய தேர்வு முகமை பலமுறை பல்வேறு வழிகளில் அறிவுறுத்தியிருந்தது. இருந்த போதும், முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டை கைப்பகுதிகள், கத்திரிக்கோலால் வெட்டப்பட்டு அரைக்கை சட்டையாக மாற்றப்பட்ட பின்னரே, தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

பெண்கள் கம்மல், மூக்குத்தி என்று அணிந்து வரக் கூடாது என்று சொல்லப் பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்ததைப் போல இந்த ஆண்டில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறவில்லை.

Related articles

Recent articles

spot_img