சபரிமலை மகரஜோதி; ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம்!

Published:

sabarimalai makara jodhi - 2026
  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம்; பக்தர்கள் பரவச முழக்கம்.
  • பந்தள மகாராஜா வழங்கிய தங்க ஆபரணங்கள், ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை.
  • அரச கோளத்தில் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு மகா தீபாராதனை; பக்தர்கள் பரவசம்.

உலக பிரசித்தி பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் சரண கோஷம் முழங்க ஐயப்பனுக்கு திருபாவரணம் அணிவிக்கப்பட்டு, பூஜைகள் சிறப்பாக செய்யப்பட, எதிரே பொன்னம்பல மேட்டில் ஜோதி தரிசனம் தெரிந்தது. சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் ஜோதி தரிசனம் கண்டு பக்திப் பரவசம் அடைந்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியது. இதையொட்டி மகர விளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் விமரிசையாக நடைபெற்றன.

பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலையில் சரங்குத்தி வந்தடைந்தது. அங்கு தேவசம் போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின் பெரிய நடை பந்தல் வழியாக சன்னிதானத்தை அடைந்தது.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தந்திரியும் மேல் சாந்தியும் திருவாபரண பெட்டியை வாங்கி நடை அடைத்து ஆபரணங்கள் அணிவித்து நடை திறந்து தீபாராதனை நடத்தினர்.

இந்த நேரத்தில் கோயில் நேர் எதிரே கிழக்கு பக்கத்தில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசித்தது. இதை பக்தர்கள் சரண கோஷத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி காட்சியளித்தது.

அப்போது சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர். மகர ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று முதல் பாரம்பரிய மளிகை புறம் மஞ்சமாதா கோயில் உற்சவம் துவங்கியது

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img