April 23, 2025, 8:07 PM
30.9 C
Chennai

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

சென்னையில் தமிழக அரசின் சாராய விற்பனை நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்த நிலையில், இந்த ஊழல் தொடர்பாக கேள்வி எழுப்பி, பாஜக., முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற, பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட, பாஜக.,  மூத்த தலைவர்களை ஆளும் திமுக., அரசின் போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசின் சாராய நிறுவனமான டாஸ்மாக் நிறுவனம், மது ஆலைகளில் இருந்து மதுபானங்களைக் கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லறை மதுக்கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறது. கடந்த மார்ச் 6ஆம் தேதி திமுக. அரசின் சாராய நிறுவனம், திமுக., அரசின் சாராய நிறுவனத்துக்கு மது கொள்முதல் செய்யும் திமுக.,வினருக்குச் சொந்தமான சாராய ஆலைகள், சாராய விற்பனை நிறுவனங்கள், அரசின் சாராய நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகம், இந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ALSO READ:  காலமானார் மூத்த தேசபக்தர் குமரி அனந்தன்! தலைவர்கள் இரங்கல்!

இந்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்நிலையில், மார்ச் 17 இன்று, அரசின் சாராய நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த முன்னதாகவே அறிவித்துவிட்டு, செல்ல திட்டமிட்ட  பாஜக., தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். கு.அண்ணாமலை உள்ப்ட, சில தலைவர்கள் செல்லும் வழியில்  கைது செய்யப்பட்டனர். 

பாஜக., சட்ட மன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோருடன், பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழக பாஜக., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, பாஜக., மாநில செயலாளர்கள் வினாத் செல்வம், அஸ்வத்தாமன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, போராட்டத்திற்குச் செல்லும் வழியில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது: “நானும் பாஜக., நிர்வாகிகளும் பேசக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது. நாங்கள் பேசினால் உண்மைகள் வெளிவந்து விடும் என்பதால் எங்களை கைது செய்கிறார்கள். நான் பேசக்கூடாது என அரசு நினைக்கிறது. டாஸ்மாக் தலைமையகம் முற்றுகைப் போராட்டத்திற்கு செல்லும் பாஜக.,வினரை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் முற்றுகையிடுவோம். 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் பணத்தை வைத்து திமுக., தேர்தலை சந்தித்தது. 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் ஊழல் பணத்தை வைத்து திமுக., சந்திக்க உள்ளது – என்று கூறினார். 

ALSO READ:  அங்கீகாரம் பெறாமல் போலி ஹால் டிக்கெட்? : மாணவிகள் தர்ணா!

செய்தியாளர்களிடம் பேசிவிட்டு போராட்டத்துக்குப் புறப்பட்ட அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

பின்னர், ஆளும் திமுக., அரசின் சாராய நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது நடவடிக்கை தொடர்பாக அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், 

தி.மு.க., அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம்.

தொடைநடுங்கி திமுக அரசு, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்திரராஜன், மாநிலச் செயலாளர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?

ALSO READ:  IPL 2025: திக்குத் தெரியாத காட்டில் மும்பை அணி

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? – என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்!

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Entertainment News

Popular Categories