ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர் திருநாடு அலங்கரித்தார்!

sriranganarayajeer - 2026

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி, இன்று பிற்பகல் 3 மணி அளவில் திருநாடு அலங்கரித்தார். அவருக்கு வயது 85.

அண்மைக் காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். நேற்று மாலை முதலே அவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்ததாம். இந்நிலையில் இன்று பிற்பகம் 3 மணி அளவில் அவர் திருநாடு அலங்கரித்ததாக ஜீயர் மடத்தில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஸ்ரீராமானுஜர் நிறுவிய விசிஷ்டாத்வைத வைணவ மார்க்கத்தின் தலைமைப் பீடமாகக் கருதப் படும் திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ஜீயராக விளங்கியவர் ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மடத்தின் 50வது பட்ட ஜீயராகத் திகழ்ந்த ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி 85 வயது ஆன தள்ளாத நிலையிலும் மடத்தின் கைங்கர்யங்களைக் குறைவற நடத்தி வந்தார்.

srirangam jeer - 2026

ஸ்ரீரங்கம் வடக்கு உத்திர வீதியில், தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ள வடக்கு வாசலுக்கு எதிரே உள்ளது ஜீயர் மடம். கடந்த இரு வருடங்களுக்கு முன்னர்(2016 மே) இந்த மடத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பூ பறிக்கச் சென்றார்.அப்போது, 30 அடி ஆழம் கொண்ட கிணற்றடி அருகே சென்ற அவர், மூச்சு வாங்க கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார்.

நீர் இல்லாமல் கிணறு வற்றியிருந்ததால், காயம் பட்டு உடலில் சிராய்ப்புகள் ஏற்பட்டன. நெற்றியில் பலத்த காயமும், கை, கால்களில் சிராய்ப்பும் ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது. அதன் பின்னர் அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

srirangam ranganarayana jeer - 2026

மிகச் சிறந்த வித்வானாகத் திகழ்ந்தவர். தமிழ், சமஸ்க்ருதம் என இரு மொழிகளிலும் வல்லவர். உபந்யாசங்கள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதிலும் வல்லவர்.

1 COMMENT

  1. இதேபோல சோகங்கள் ஸ்ரீரங்கத்தில் அதிகரிக்க காரணம் என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories