சங்கர நேத்ராலயாவுக்கு கண் தானம் செய்த பெருந்தகை.. ஐராவதம் மகாதேவன்!

 

airavatham mahadevan sankaranethralaya3 - 2026

தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒரு மாபெரும் ஆளுமை காலமானார். ஐராவதம் மஹாதேவன் அவர்களை “தினமணி” – நாளிதழின் ஆசிரியராகவே அறிந்தவன். அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் பணியாற்றிய போது, அவர் அங்கே சிகிச்சை பெற்று வந்த ஒரு நண்பரைக் காண வந்தார். அப்போது அவருக்கு நான் அறிமுகம் ஆனேன்.

அவருடைய நண்பரை பணிநிமித்தம் நேர்முகம் செய்து கொண்டிருந்த போதும், அவருக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த போதும், அமைதியாகக் காத்திருந்தவர், என்னுடனும் சில நிமிடங்கள் உரையாடினார்.

ஒரு நோயாளியின் உறவினர் என்றே நினைத்துப் பேசிய என்னிடம், விடைபெறும் தறுவாயில்தான் “மஹாதேவன் – ஐராவதம் மஹாதேவன்” – என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். நான் பெற்ற மாபெரும் பேறு.

பின்னர் சங்கர நேத்ராலயாவின் பணிக்கு வந்த பிறகு, என் குருநாதர் நான் எழுதிய “புதிய பார்வை” நூல் பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு வரும்படி பணிக்க, அவ்வாறே சென்றேன். அறையில் அமர்ந்திருந்தவர் “ஐராவதம் மஹாதேவன்” அவர்கள்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
airavatham mahadevan sankaranethralaya2 - 2026
ஐராவதம் மகாதேவன் …. சங்கர நேத்ராலயாவின் பரங்கிமலை கம்ப்யூனிட்டி ஹாஸ்பிடல் பூமி பூஜையில் கலந்து கொண்ட போது… (படம்: ஏ.பி. இருங்கோவேள்)

என் குருநாதர் மீண்டும் அறிமுகம் செய்து வைக்க, “இருங்கோவேளை” தெரியுமே, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சந்தித்திருக்கிறேனே, நலமா?” – என்று கரம் குலுக்கி விசாரித்தார்.

என் “புதிய பார்வை” – நூலைப் பெற்றுக்கொண்டு ஆசீர்வதித்தவர், தனது கண்களை தானமாக வழங்க வேண்டுமானால், என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். விவரம் கேட்டவரிடம் சொன்னேன். அன்றே, தனது கண்களை தானமாக அளிக்க உறுதி எடுத்துக் கொண்டார். மேன்மக்கள் என்றும் மேன் மக்களே!.

வாழ வேண்டிய வயதில் அமரராகிப் போன தன் மகன் “அமரர் வித்யாசாகர்” நினைவாக சங்கர நேத்ராலயாவின் “உயிரிதொழில் நுட்பம் மற்றும் அடிப்படை அறிவியல் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் நன்கொடை அளித்தார்.

airavatham mahadevan sankaranethralaya - 2026
ஐராவதம் மகாதேவன் …. சங்கர நேத்ராலயாவின் பரங்கிமலை கம்ப்யூனிட்டி ஹாஸ்பிடல் பூமி பூஜையில் கலந்து கொண்ட போது… (படம்: ஏ.பி. இருங்கோவேள்)

தன் மகன் பெயரில் சங்கர நேத்ராலயாவில் துலங்கும், “வித்யாசாகர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பயோ டெக்னாலஜி அண்ட் பேசிக் சயின்ஸ்” – நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் பரங்கிமலையில் கட்டப்பட்டு வரும் சங்கர நேத்ராலயாவின் கம்ப்யூனிட்டி மருத்துவமனையின் பூமி பூஜையிலும் கலந்து கொண்டு நன்கொடை வழங்கினார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

ஆம், இன்று அவரது கண்களை தானமாக அளித்துவிட்டு அமரராகி விட்டார். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு என்னிடம், தனது கண் தான உயிலை வழங்கியவர், இன்று தன் கண்களை தானமாக சங்கர நேத்ராலயாவின் கண் வங்கிக்கு வழங்கி விட்டு, விண்ணுலகில் கண்ணிமைக்கா தேவராகிப் போனார்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மாமேதை ஐயா ஐராவதம் மஹாதேவனின் ஆன்மா எல்லாம் வல்ல அந்த மஹாதேவனின் திருவடிகளில் இளைப்பாறட்டும்”

– ஏ.பி. இருங்கோவேள் 

மேலாளர் – பயனாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை. சங்கர நேத்ராலயா, சென்னை.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories