December 5, 2025, 5:20 PM
27.9 C
Chennai

சங்கர நேத்ராலயாவுக்கு கண் தானம் செய்த பெருந்தகை.. ஐராவதம் மகாதேவன்!

 

airavatham mahadevan sankaranethralaya3 - 2025

தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒரு மாபெரும் ஆளுமை காலமானார். ஐராவதம் மஹாதேவன் அவர்களை “தினமணி” – நாளிதழின் ஆசிரியராகவே அறிந்தவன். அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் பணியாற்றிய போது, அவர் அங்கே சிகிச்சை பெற்று வந்த ஒரு நண்பரைக் காண வந்தார். அப்போது அவருக்கு நான் அறிமுகம் ஆனேன்.

அவருடைய நண்பரை பணிநிமித்தம் நேர்முகம் செய்து கொண்டிருந்த போதும், அவருக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த போதும், அமைதியாகக் காத்திருந்தவர், என்னுடனும் சில நிமிடங்கள் உரையாடினார்.

ஒரு நோயாளியின் உறவினர் என்றே நினைத்துப் பேசிய என்னிடம், விடைபெறும் தறுவாயில்தான் “மஹாதேவன் – ஐராவதம் மஹாதேவன்” – என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். நான் பெற்ற மாபெரும் பேறு.

பின்னர் சங்கர நேத்ராலயாவின் பணிக்கு வந்த பிறகு, என் குருநாதர் நான் எழுதிய “புதிய பார்வை” நூல் பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு வரும்படி பணிக்க, அவ்வாறே சென்றேன். அறையில் அமர்ந்திருந்தவர் “ஐராவதம் மஹாதேவன்” அவர்கள்.

airavatham mahadevan sankaranethralaya2 - 2025
ஐராவதம் மகாதேவன் …. சங்கர நேத்ராலயாவின் பரங்கிமலை கம்ப்யூனிட்டி ஹாஸ்பிடல் பூமி பூஜையில் கலந்து கொண்ட போது… (படம்: ஏ.பி. இருங்கோவேள்)

என் குருநாதர் மீண்டும் அறிமுகம் செய்து வைக்க, “இருங்கோவேளை” தெரியுமே, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சந்தித்திருக்கிறேனே, நலமா?” – என்று கரம் குலுக்கி விசாரித்தார்.

என் “புதிய பார்வை” – நூலைப் பெற்றுக்கொண்டு ஆசீர்வதித்தவர், தனது கண்களை தானமாக வழங்க வேண்டுமானால், என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். விவரம் கேட்டவரிடம் சொன்னேன். அன்றே, தனது கண்களை தானமாக அளிக்க உறுதி எடுத்துக் கொண்டார். மேன்மக்கள் என்றும் மேன் மக்களே!.

வாழ வேண்டிய வயதில் அமரராகிப் போன தன் மகன் “அமரர் வித்யாசாகர்” நினைவாக சங்கர நேத்ராலயாவின் “உயிரிதொழில் நுட்பம் மற்றும் அடிப்படை அறிவியல் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் நன்கொடை அளித்தார்.

airavatham mahadevan sankaranethralaya - 2025
ஐராவதம் மகாதேவன் …. சங்கர நேத்ராலயாவின் பரங்கிமலை கம்ப்யூனிட்டி ஹாஸ்பிடல் பூமி பூஜையில் கலந்து கொண்ட போது… (படம்: ஏ.பி. இருங்கோவேள்)

தன் மகன் பெயரில் சங்கர நேத்ராலயாவில் துலங்கும், “வித்யாசாகர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பயோ டெக்னாலஜி அண்ட் பேசிக் சயின்ஸ்” – நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் பரங்கிமலையில் கட்டப்பட்டு வரும் சங்கர நேத்ராலயாவின் கம்ப்யூனிட்டி மருத்துவமனையின் பூமி பூஜையிலும் கலந்து கொண்டு நன்கொடை வழங்கினார்.

ஆம், இன்று அவரது கண்களை தானமாக அளித்துவிட்டு அமரராகி விட்டார். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு என்னிடம், தனது கண் தான உயிலை வழங்கியவர், இன்று தன் கண்களை தானமாக சங்கர நேத்ராலயாவின் கண் வங்கிக்கு வழங்கி விட்டு, விண்ணுலகில் கண்ணிமைக்கா தேவராகிப் போனார்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மாமேதை ஐயா ஐராவதம் மஹாதேவனின் ஆன்மா எல்லாம் வல்ல அந்த மஹாதேவனின் திருவடிகளில் இளைப்பாறட்டும்”

– ஏ.பி. இருங்கோவேள் 

மேலாளர் – பயனாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை. சங்கர நேத்ராலயா, சென்னை.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories