பாஜக., வளர்ச்சிக்கு காங்கிரஸே காரணம்: தோல்வி பயத்தில் மம்தா குற்றச்சாட்டு!

mamta banarjee vaiko - 2026
கோப்பு படம்

பாஜக வளர்ச்சி அடைய காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக வளர்ச்சி அடைவதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று, மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட வைத்துவிட்டு, இப்போது மோடிக்கு மாநிலத்தில் அதிகரித்து வரும் செல்வாக்கைக் கண்டு பயந்து போய் திடீரென ஒரு குற்றச் சாட்டை காங்கிரஸ் மீது வைத்துள்லார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி!

ராய்கஞ்ச் நகரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், பாஜகவுக்கு எதிராக வலிமையாக போராட காங்கிரஸ் கட்சி தவறி விட்டது என்று குற்றம் சாட்டினார்.

வலிமையாகப் போராடாததால்தான், பாஜக வளர்ச்சி அடைய வழிவகை ஏற்பட்டடது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க விரும்பினால் மற்றவர்களின் ஆதரவை அவசியம் அவர் கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

பாஜக அரசு மத்தியில் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பிறகு, புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணியில் இணைந்து பணியாற்றுவோம் என்று மம்தா பானர்ஜி காங்கிரஸுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், பிரதமர் நாற்காலி மீதுள்ள கனவில், காங்கிரஸை கூட்டணியிலேயே சேர்த்துக் கொள்ளவில்லை மம்தா பானர்ஜி. கிட்டத்தட்ட கூட்டணி வைத்துள்ள எல்லா மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சிக்கு மிகக் குறைவான தொகுதிகளையே மகா கட்பந்தன் எனும் மெகா கூட்டணியில் இடம் ஒதுக்கப் பட்டது. இதைக் கண்டு வெறுத்துப் போய், காங்கிரஸ் கட்சி, ஆந்திரம், தில்லி, தெலங்கானா, மேற்கு வங்கம், பீகார், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் தனித்தே போட்டியிட தீர்மானித்தது. அதற்கு முன்னர் வரை மெகா கூட்டணி என்று கூறிக் கொண்டிருந்தவர்கள், காங்கிரஸை மட்டும் கழற்றிவிட்டார்கள். அதில் முதலாமவர் மம்தா பானர்ஜியே!

மாநிலத்தில் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, மக்களை மிரட்டி, தங்களுக்கு ஓட்டு போடும் படி மம்தா கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோடிக்கு எதிராக வாள் சுற்றி வந்ததால் தனக்கு தலைமைப் பீடம் கிடைக்கும் எனக் காத்திருந்த மம்தா, தற்போது, நான்கு முனைப் போட்டி நடப்பதால், தனக்கான வாய்ப்பு குறைந்து வருவது கண்டு அச்சத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும், மேற்கு வங்கத்தில் மோடியின் செல்வாக்கு உயர்ந்து வருவது, அண்மைக்கால அவரது பேரணிக்கு வந்த கூட்டத்தினரை வைத்து வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

இந்நிலையில், தனது அடித்தளம் ஆட்டம் கண்டுள்ளதால், காங்கிரஸை குற்றம்சாட்டிப் பேசி வருகிறார் மம்தா பானர்ஜி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories