பாஜக., வளர்ச்சிக்கு காங்கிரஸே காரணம்: தோல்வி பயத்தில் மம்தா குற்றச்சாட்டு!

mamta banarjee vaiko - 2026
கோப்பு படம்

பாஜக வளர்ச்சி அடைய காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக வளர்ச்சி அடைவதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று, மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட வைத்துவிட்டு, இப்போது மோடிக்கு மாநிலத்தில் அதிகரித்து வரும் செல்வாக்கைக் கண்டு பயந்து போய் திடீரென ஒரு குற்றச் சாட்டை காங்கிரஸ் மீது வைத்துள்லார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி!

ராய்கஞ்ச் நகரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், பாஜகவுக்கு எதிராக வலிமையாக போராட காங்கிரஸ் கட்சி தவறி விட்டது என்று குற்றம் சாட்டினார்.

வலிமையாகப் போராடாததால்தான், பாஜக வளர்ச்சி அடைய வழிவகை ஏற்பட்டடது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க விரும்பினால் மற்றவர்களின் ஆதரவை அவசியம் அவர் கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பாஜக அரசு மத்தியில் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பிறகு, புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணியில் இணைந்து பணியாற்றுவோம் என்று மம்தா பானர்ஜி காங்கிரஸுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், பிரதமர் நாற்காலி மீதுள்ள கனவில், காங்கிரஸை கூட்டணியிலேயே சேர்த்துக் கொள்ளவில்லை மம்தா பானர்ஜி. கிட்டத்தட்ட கூட்டணி வைத்துள்ள எல்லா மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சிக்கு மிகக் குறைவான தொகுதிகளையே மகா கட்பந்தன் எனும் மெகா கூட்டணியில் இடம் ஒதுக்கப் பட்டது. இதைக் கண்டு வெறுத்துப் போய், காங்கிரஸ் கட்சி, ஆந்திரம், தில்லி, தெலங்கானா, மேற்கு வங்கம், பீகார், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் தனித்தே போட்டியிட தீர்மானித்தது. அதற்கு முன்னர் வரை மெகா கூட்டணி என்று கூறிக் கொண்டிருந்தவர்கள், காங்கிரஸை மட்டும் கழற்றிவிட்டார்கள். அதில் முதலாமவர் மம்தா பானர்ஜியே!

மாநிலத்தில் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, மக்களை மிரட்டி, தங்களுக்கு ஓட்டு போடும் படி மம்தா கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோடிக்கு எதிராக வாள் சுற்றி வந்ததால் தனக்கு தலைமைப் பீடம் கிடைக்கும் எனக் காத்திருந்த மம்தா, தற்போது, நான்கு முனைப் போட்டி நடப்பதால், தனக்கான வாய்ப்பு குறைந்து வருவது கண்டு அச்சத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும், மேற்கு வங்கத்தில் மோடியின் செல்வாக்கு உயர்ந்து வருவது, அண்மைக்கால அவரது பேரணிக்கு வந்த கூட்டத்தினரை வைத்து வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது.

இந்நிலையில், தனது அடித்தளம் ஆட்டம் கண்டுள்ளதால், காங்கிரஸை குற்றம்சாட்டிப் பேசி வருகிறார் மம்தா பானர்ஜி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories