சர்வதேச அளவில் புலம் பெயர்ந்தோர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்!

air india 2 - 2026

இந்த ஆண்டுக்கான சர்வதேச அளவிலான புலம்பெயர்ந்தோர் அறிக்கையை ஐ.நா.சபையின் பொருளாதார மற்றும் சமூகநலத் துறையின் மக்கள் தொகை பிரிவு நேற்று வெளியிட்டது.

இதில் வேலை நிமித்தமாகவோ, அகதிகளாகவோ தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் தாய்நாடு, வயது, பாலினம் ஆகிய விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கையின்படி வெளிநாடுகளில் வசிக்கும் 1.75 கோடி இந்தியர்கள் சர்வதேச புலம்பெயர்ந்தோர் பட்டியலில் முதலிடம் வகித்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் 1.75 கோடி இந்தியர்கள் வசிப்பதாக ஐ.நா. புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதன்மூலம் சர்வதேச அளவில் புலம்பெயர்ந்து வசிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

இதன்படி உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வசிப்போர் எண்ணிக்கை 27.2 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2010-ம் ஆண்டைவிட (22.1 கோடி) 23 சதவீதம் அதிகம். இப்போதைய நிலவரப்படி, உலக மக்கள் தொகையில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 3.5 சதவீதமாக உள்ளது. இது 2000-வது ஆண்டில் 2.8 சதவீதமாக இருந்தது.

சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தோர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அதாவது 1.75 கோடி பேர் உலகின் பல்வெறு நாடுகளில் வசிக்கின்றனர். இது சர்வதேச அளவிலான புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் 6 சதவீதமாகும்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக, மெக்சிகோ (1.18 கோடி), சீனா (1.07 கோடி), ரஷ்யா (1.05 கோடி), சிரியா (82 லட்சம்), வங்கதேசம் (78 லட்சம்), பாகிஸ்தான் (63 லட்சம்) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

புலம்பெயர்ந்தவர்களில் 50 சதவீதம் பேர் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளில் வசிக்கின்றனர். இதில் அமெரிக்கா 5.1 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக ஜெர்மனி மற்றும் சவுதி அரேபியாவில் தலா 1.3 கோடி வெளிநாட்டவர்கள் வசிக்கின்றனர்.

இந்தியாவில் 51 லட்சம் வெளி நாட்டினர் வசிக்கின்றனர். இதில் 4 சதவீதம் பேர் அகதிகள். இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம்.

  • கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories