December 6, 2025, 9:37 AM
26.8 C
Chennai

சர்வதேச அளவில் புலம் பெயர்ந்தோர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்!

air india 2 - 2025

இந்த ஆண்டுக்கான சர்வதேச அளவிலான புலம்பெயர்ந்தோர் அறிக்கையை ஐ.நா.சபையின் பொருளாதார மற்றும் சமூகநலத் துறையின் மக்கள் தொகை பிரிவு நேற்று வெளியிட்டது.

இதில் வேலை நிமித்தமாகவோ, அகதிகளாகவோ தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் தாய்நாடு, வயது, பாலினம் ஆகிய விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கையின்படி வெளிநாடுகளில் வசிக்கும் 1.75 கோடி இந்தியர்கள் சர்வதேச புலம்பெயர்ந்தோர் பட்டியலில் முதலிடம் வகித்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் 1.75 கோடி இந்தியர்கள் வசிப்பதாக ஐ.நா. புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதன்மூலம் சர்வதேச அளவில் புலம்பெயர்ந்து வசிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

இதன்படி உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வசிப்போர் எண்ணிக்கை 27.2 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2010-ம் ஆண்டைவிட (22.1 கோடி) 23 சதவீதம் அதிகம். இப்போதைய நிலவரப்படி, உலக மக்கள் தொகையில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 3.5 சதவீதமாக உள்ளது. இது 2000-வது ஆண்டில் 2.8 சதவீதமாக இருந்தது.

சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தோர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அதாவது 1.75 கோடி பேர் உலகின் பல்வெறு நாடுகளில் வசிக்கின்றனர். இது சர்வதேச அளவிலான புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் 6 சதவீதமாகும்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக, மெக்சிகோ (1.18 கோடி), சீனா (1.07 கோடி), ரஷ்யா (1.05 கோடி), சிரியா (82 லட்சம்), வங்கதேசம் (78 லட்சம்), பாகிஸ்தான் (63 லட்சம்) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

புலம்பெயர்ந்தவர்களில் 50 சதவீதம் பேர் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளில் வசிக்கின்றனர். இதில் அமெரிக்கா 5.1 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக ஜெர்மனி மற்றும் சவுதி அரேபியாவில் தலா 1.3 கோடி வெளிநாட்டவர்கள் வசிக்கின்றனர்.

இந்தியாவில் 51 லட்சம் வெளி நாட்டினர் வசிக்கின்றனர். இதில் 4 சதவீதம் பேர் அகதிகள். இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம்.

  • கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories