வருண பகவான்… சில குறிப்புகள்!

varunan
varunan

வருண பகவான் – சில சிந்தனைகள்
-கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

சென்னையில் கடந்த மாதம் வரை நல்ல மழை பெய்தது. வருண பகவான் கண்ணைத் திறந்தார். சென்னைக்கு ஒரு வருடத்திற்கு தண்ணீர் கஷ்டம் இல்லை. இப்படி எல்லாம் மக்கள் பேசிக் கொள்வதைக் கேட்கிறேன்.

வருண பகவான் யார்? சிந்திக்கத் தொடங்கினேன். ரிக் வேதத்திலும் தொல்காப்பியத்திலும் வருண பகவானைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் சொல்வதே என்னுடைய நோக்கம்.

வருண காயத்ரி:
ஓம் ஜலபிம்பாய வித்மஹே நீல் புருஷாய தீமஹி தன்னோ வருணப் ப்ரசோதயாத்

மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும்

மேலே உள்ளது தொல்காப்பியப் பொருளதிகாரப் பாடல் ஆகும்.
கடல் சார்ந்த நெய்தல் இன மக்கள் வருணனை வழிபட்டனர் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சந்தியாவந்தனம் மந்திரத்தில் தினசரி வருணனை எண்ணி வழிபாடு செய்கிறோம்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

கிழக்கில் இந்திரன், தென்கிழக்கில் அக்னி, தெற்கில் எமன், தென்மேற்கில் நிருதி, மேற்கில் வருணன், வடமேற்கில் வாயு, வடக்கில் குபேரன், வடகிழக்கில் ஈசானன், ஆகாயமான ஊர்த்துவ திசையில் பிரம்மன், பாதாளத்தைத் தாண்டியுள்ள அதோ திக்கில் விஷ்ணு- ஆகியோர் இருந்து உலகைக் காவல் புரிகின்றனர்.

ஆகாயம் பாதாளம் இரண்டையும் தவிர்த்து மற்ற எட்டு திசைகளையும் அஷ்டதிக் பாலர்கள் காவல் காப்பதாக கொண்டாடுகிறோம்.

மேற்கில் வாழும் வருணன் பெரும் நீர்ப் பரப்புக்குச் சொந்தக்காரன். குபேரனை விட பணக்காரன். கடலுக்கு அடியில் பட்டினம் அமைத்துக்கொண்டு வாழும் வருணனுக்கு மகர மீன்கள் காவல் புரிகின்றனர். கடல் அரசனான வருணனுக்கு பணிவிடை செய்ய மச்சக்கன்னிகைகளும், நாக கன்னிகளும் உள்ளனர் என வருண புராணம் சொல்கிறது!

அக்காலத்தில் கடல் மார்க்கமாகப் பயணம் செய்தவர்கள் வருணனை ஆபத்துக்களில் இருந்து காப்பாற்ற பூஜை செய்தனர். வெண்மை நிறம் கொண்டவர். இவரை ஜலாதிபதி, மேகாதிபதி என்றும் அழைப்பார்கள். இவருடைய தேவி பத்மினி காளகண்டி என்பவர்களாவர்.

மூங்கில் அரிசியால் வடிக்கப்பட்ட சாதம் தயிர் சாதம் ஆகியன இவருக்கு உரிய நேவேத்தியம் களாகும்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

ஓம் ஹாம் வம் போகிநி சகிதாய பாச ஹஸ்தாய வருணனே நம:
வெள்ளை நிறமும் மீன் வாகனமும் பத்மம் பாசம் அபயவரதமும் கொண்ட வருண தேவரை வாழ்த்துவோம் என்பது மேலே உள்ள சுலோகத்தின் சுமாரான பொருளாகும்.

உயிர்கள் வாழவும் இயற்கை செழிக்கவும் நீரே ஆதாரம் என்பதால் வருணன் கடவுளாக வழிப் பாட்டுக்கு உரியவர் ஆகிறார்.
வருணனின் சிறப்பை உணர்ந்தே திருவள்ளுவ நாயனார் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வான் சிறப்பை வைத்தார் என்று சொல்லலாம்.

ராமபிரான் கடல்மேல் பாலம் கட்ட விரும்பியபோது வர்ணனை நோக்கி தியானிக்கிறார். பின்னர் அவரையே கட்டிக்கொண்டு பாலத்தைத் திறம்படக் கட்டுகிறார் வானரங்களின் உதவியோடு என்பதை இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த உலகை காப்பவன், விவசாயத்தை காப்பவன், குடிதண்ணீர் வழங்குபவன், வருணன் என்பதை உணர்ந்து அவனை என்றும் நினைத்து நமஸ்கரிப்போம்!!

  • ஆசிரியர், கலைமகள், மஞ்சரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories