தினசரி ஒரு வேதவாக்கியம்: 6. சிவ சங்கல்பம்!

dhinasari oru vedha vaakyam

தினசரி ஒரு வேதவாக்கியம்
சிவ சங்கல்பம்! 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன் 

தன்மே மன: சிவ சங்கல்பமஸ்து||
— யஜுர்வேதம்

“என் மனம் சிவ (சுப) சங்கல்பத்தில் இருக்குமாக!”

எல்லாவற்றுக்கும் மனம்தான் காரணம். புலன்களின் உயிரோட்டத்திற்கு மனமே மூலம். மனம் செய்யும் சங்கல்பங்களே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.

“மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:”

பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும், சுகத்திற்கும் துக்கத்திற்கும் மனம்தான் காரணம்.

சங்கல்பத்தை பொறுத்தே செய்யும் பணியும்  அதன் விளைவும் இருக்கும். சங்கல்பம் தூய்மையாக இருந்தால் பணி சரிவர நடைபெறும். பலனும் சிறப்பாக இருக்கும்.

அத்தகைய சங்கல்பத் தூய்மையை அளிக்கும் வேத மந்திரம் இது. சுக்ல யஜுர் வேதத்தில் இந்த சிவ சங்கல்பம் ஒரு சூக்தமாக பல மந்திரங்களோடு  இணைந்து காணப்படுகிறது.

சிவம் என்பது சாஸ்வதமான சுபத்தை குறிக்கிறது. ‘சிவ’ என்ற சொல் உயர்ந்த தெய்வீக அர்த்தங்கள் நிறைந்தது.  இதற்கு ஸ்ரேயஸ், மங்களம், மோட்சம் என்ற பொருட்கள் உள்ளன.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

சுயநலமான பொருளீட்டல் சிவம் அல்ல. தற்காலிக சுகமும் சிவம் அல்ல. பரிணாமத்திலும் கூட சுபமாக விளங்குவதே சிவம்.
அப்படிப்பட்ட ‘சிவம்’ நம் சங்கல்பமானால்  அனைத்தும் சத்தியமாக விளங்கும். சுந்தரமாகத் திகழும்.

இன்னுமொரு சிறப்பு ‘சிவ’ என்ற பதம் பரமேஸ்வரனைக் குறிக்கும் நாமம். சாசுவதமான மங்கள சொரூபமே சிவன். இந்த ஜகம் அனைத்தும் அவருடைய சங்கல்பமே! நம் சங்கல்பங்கள் அனைத்தையும்விட ஈஸ்வர சங்கல்பமே முக்கிய தூண்டுதலாகவும் பிரேரணையாகவும் உள்ளது.

அதனால் நம் சங்கல்பம் மகாதேவனின் சங்கல்பத்திற்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பது கூட இந்த மந்திரத்தின் பொருளாகக் கருதலாம்.

நம் சங்கல்பம் ஈஸ்வர சங்கல்பமாக ஆக வேண்டும். அதாவது ஈஸ்வர சங்கல்பத்தோடு ஒன்றிணைய வேண்டும். அப்போது சாஸ்வதமான, கடக்க முடியாத கடவுளின் சங்கல்பத்திற்கு நம் சங்கல்பம் விரோதமாக மாறாது. அதன்மூலம் நினைத்தது ஒன்று நடப்பது வேறொன்றாக இருக்காது.

அது மட்டுமின்றி சிவனை நினைப்பதால் நம் சங்கல்பம் சக்தியோடு கூடியதாகி ஈசுவர சங்கல்பத்தைப் போலவே கச்சிதமான செயல்வடிவம் பெற்று நிறைவேறுகிறது.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

இத்தனை உயர்ந்த அர்த்தங்களும் இன்னும் பல தெய்வீக கருத்துக்களும் இந்த வேத  வாக்கியத்தில் மறைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories