காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 105):

godse - 2026

பின்னாளில் காவல்துறை விசாரணை அதிகாரிகள்,இந்த டிரங்காலை செய்தது நாதுராம் கோட்ஸேதான்,கோபால் கோட்ஸே, பம்பாய் வந்தது பற்றி ஏதாவது தகவல் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ளத்தான் எனும் வாதத்தை முன் வைத்தனர்.

இந்த முயற்சியெல்லாம், காந்தி கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும், டெல்லிக்கு பயணிப்பதற்கு முன் சாவர்க்கரிடமிருந்து உத்தரவுகளையோ, அல்லது அவரது ஆசிகளையோ பெற்றார்கள் என்று நிரூபிக்கத்தான்.

ஆனால்,காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற கோபால் கோட்ஸே பின்னாளில் கூறிய தகவலின்படி, அவருக்கு சாவர்க்கரின் வீடு எங்கிருக்கிறது என்றே தெரியாது என்றார்.

மாறாக,டெல்லியிலிருந்த ஹிந்து மஹா சபாவின் செயலாளர் சாவர்க்கருடன் பேச விரும்பியிருக்கலாம்,அல்லது அவருக்கு ஏதாவது தகவல் சொல்ல எண்ணியிருக்கலாம் என்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

ஹிந்து மஹா சபாவின் அப்போதைய தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் யாராக இருந்த போதிலும்,காங்கிரஸ்காரர்களுக்கு காந்தி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாவர்க்கர் ஹிந்து மஹா சபா தொண்டர்களுக்கு.

இது குறித்து ஒரு அறிவிப்பை அப்போது லஹிரி வெளியிட முற்பட்ட போது,பொது மக்களிடமிருந்தும்,அரசிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

ஆனால் சாவர்க்கரை எப்படியாவது காந்தி கொலையில் சம்பந்தப்படுத்தியே தீர வேண்டும் என்ற உத்வேகத்தில் அரசியல்வாதிகளும்,அரசு அதிகாரிகளும் அதிதீவிரமாக முயன்றும்,உழைத்தும் கொண்டிருந்த சூழ்நிலையில்,

சாவர்க்கர் இல்லத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றது தாங்கள்தான் என்று தைரியமாக கூற யாரும் முன் வரவில்லை.

ஆக சாவர்க்கரின் இல்லத்திற்கு தொடர்புகொள்ள முயன்றவர்கள் யாரென்பது கடைசி வரை ரகசியமாகவே இருந்து போனது.

ஆனால் நாதுராம்தான் அந்த ’ காலை ‘( CALL ) செய்தார் என்று போலீஸாரால் நிரூபிக்க இயலவில்லை.

அப்படியேயிருந்தாலும்,அதை நிரூபிப்பதால் எந்த பயனும் வந்திருக்காது.ஏனென்றால் அந்த டிரங்கால் பேசப்படவேயில்லை. காலை 11.30 அளவில் அதை யார் புக் செய்தாரோ, அவரே அதை கேன்ஸலும் செய்து விட்டிருந்தார்.

அந்த ‘ காலை ‘ப்பற்றி இவ்வளவு பிரஸ்தாபமானதின் நோக்கம், காந்தி கொலையில் சாவர்க்கரை எப்படியாவது சம்பந்தப்படுத்தி விட வேண்டும் என்பதுதான்.

ஆனால்,கார்கரேயின் கூற்றின்படி,’ கால் ‘ செய்யப்பட்டதாக கூறப்பட்ட அந்த நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகத்தான் எல்லோரும் கோபால் கோட்ஸே,திகம்பர் பாட்கே மற்றும் ஷங்கர் கிஷ்டய்யா ஆகியோருக்காக ஆவலாகக் காத்திருந்தபோது,

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

ஒரு ‘ டோங்கா ‘ சத்தம் கேட்க வெளியே வந்து பார்த்த போது,கோபால் கோட்ஸே மட்டும் அதிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார். அவரை அவசர அவசரமாக அறைக்கு அழைத்துச் சென்றவர்கள் அவரிடம் கேட்ட முதல் கேள்வி அவர் ரிவால்வரை கொண்டு வந்திருக்கிறாரா என்பதுதான்.

கோபால் கோட்ஸே ரிவால்வரை கொண்டு வந்திருந்தார். அதன் பிறகு கோபால் கோட்ஸேயை அறையிலேயே குளிக்கவும்,ரெஸ்ட் எடுக்கவும் விட்டு விட்டு,மீண்டும் ஒரு முறை ஆய்வினை மேற்கொள்ள,கார்கரே,நாதுராம்,ஆப்தே ஆகியோர் பிர்லா ஹவுஸிற்கு சென்றனர்.

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories