spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்ரஃபேல் - பித்தலாட்ட பிரச்சாரத்தின் உச்சம்!

ரஃபேல் – பித்தலாட்ட பிரச்சாரத்தின் உச்சம்!

- Advertisement -

“ஜூட் போல், ஜோர்சே போல், பார் பார் போல்” என்று இந்தியில் சொல்வார்கள். அதாவது “பொய் சொல், ஓங்கிச் சொல், ஓயாமல் சொல்” – ராஜீவ் காந்தியின் ஆலோசகரும் ஸ்கேமோனியாவின் நண்பருமாகிய சாம்பிட்ரோடா பப்பு ராகுலுக்கு வழங்கிய அற்புதமான ஆலோசனை இது!

பிரச்சினை என்னவென்றால் பப்புவிற்கு லாகிரியின் பாதிப்போ என்னவோ புத்தி சரியாக வேலை செய்வதில்லை. அதனால் சொல்லுகின்ற பொய்யை சாமர்த்தியமாக சொல்லத் தெரியவில்லை. பப்பு இதுவரை விமானத்திற்கு குறிப்பிட்ட விலை 520 கோடியில் இருந்து 740 கோடி வரை!

இவரே போய் துணி எடுத்து தைத்து மோடிக்கு போட்டு விட்ட மாதிரி பத்து லட்சம் ரூபாய் கோட் பத்து லட்சம் ரூபாய் கோட் என்று உளறியதை எப்படி ஒரு படிப்பறிவில்லாத அல்லது படித்தும் அறிவில்லாத கூட்டம் நம்பியதோ அதைப் போல இந்த விமான விவகாரத்தையும் பேசித் திரியலாம் என்று கணக்குப் போடுது பப்பு! அந்த கோட் யார் கொடுத்தது எதற்கு கொடுத்தார்கள் என்று தெரியாமல் எவ்வளவு கதை கட்டினார்கள்! பப்பு பத்து லட்சம் என்று சொல்லியதால் அது நாலரைக் கோடிக்கு ஏலம் போய், அந்தப்பணம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு சென்று விட்டது. அது போல பப்புவின் ரஃபேல் பொய்களும் கங்கையில் கழுவப்படும்!

ரஃபேலுக்கு பிறகு வருவோம். அதற்கு முன்னால் 1963 முதல் 2013 நாம் வாங்கிய, பயன்படுத்திய மிக் விமானங்கள் 1200. அதிலே தரையில் விழுந்து நொறுங்கியது சுமார் 840 விமானங்கள். அதாவது 70 சதவீதம் வரை தரக்குறைவால் அழிந்து போனது. அதில் இறந்து போன அனுபவமிக்க விமானிகள் எண்ணிக்கை 170 பேர்! பொதுமக்கள் சுமார் 80 பேர்! இதற்கு காரணம் காங்கிரஸ் அரசு கமிஷன் பெற்று வாங்கிய தரக்குறைவான விமானங்கள். இவர்களின் பாவம் இத்தாலியக் குடும்பத்தை சும்மா விடுமா?

அடுத்து HAL கதைக்கு வருவோம். மல்லிகார்ஜுன கார்கே தலைவராக இருந்த கமிட்டி, எச். ஏ. எல் மீது மிகப்பெரிய குற்றம் சாட்டியது. கார்கே அவர்கள் எச். ஏ. எல்லை தூற்றி பேசிய பேச்சு பாராளுமன்ற அவைக்குறிப்பில் இன்னும் உள்ளது.

எச். ஏ. எல் தனக்கு கொடுத்த பத்து தேஜஸ் விமானங்களை பத்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிக்கவில்லை. அவர்கள் பதினெட்டு சுகோய் விமானங்களில் பயன் படுத்திய பழைய இஞ்சினை பொருத்தியதாக, சில விமானங்கள் விபத்துக்குள்ளான பின் கண்டுபிடிக்கப்பட்டது. அது போல பழுது பார்க்க கொடுக்கப்பட்ட, இருபத்தியாறு ஜாக்வார் விமானங்களை இன்னும் சரி செய்யாமல் எச்.ஏ.எல் நிறுவனம் வைத்திருக் கிறது. இந்த காரணங்களால் எச்.ஏ.எல் நிறுவனத்தை டசால்ட் நிறுவனம் தேர்ந்தெடுக்க வில்லை.

பப்புவிற்கும் இத்தாலியக் குடும்பத்திற்கும் எச்.ஏ.எல் நிறுவனத்தின் மீது அக்கறை இருந்திருக்குமானால் ஏன் தங்களுடைய ஆட்சி காலத்தில் இத்தாலிய நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திற்கு ஹெலிகாப்டர் ஆர்டர் கொடுத்தனர்?

இதுவரை ஒருமுறையாவது பப்புவோ, ஸ்கேமோனியாவோ இல்லை இத்தாலியக் குடும்பத்தில் ஒருவராவது எச்.ஏ.எல் ஹெலிகாப்டரில் பயணித்திருக்கின்றனரா? இவர்கள் குடும்பம் உலகத்தரம் வாய்ந்த ஹெலிகாப்டரில் பயணிக்க வேண்டும். ஆனால் விமானப் படை வீரர்கள் பாதுகாப்பில்லாத விமானங்களை பயன்படுத்த வேண்டும். என்ன கொடூரமான புத்தி!

அடுத்ததாக அனில் அம்பானி விவகாரம். எந்த அனுபவமும் இல்லாத அனில் அம்பானிக்கு ஏன் உதிரி பாகங்கள் தயாரிக்க அனுமதித்தார்கள்? என்பது பப்புவின் கேள்வி. எந்த அனுபவமும் இல்லாத அனில் அம்பானிக்கு டெல்லி மெட்ரோ ரெயில் அமைக்க அனுமதி கொடுத்தது ஐ.மு. அரசு. திட்ட அனுமதி சுமார் 5000 கோடிக்கு மேல். மும்பை காட்கோபர் மெட்ரோ ரயில் இயக்க அனுமதியையும் ஸ்கேமோனியா பப்பு மௌன்மோஹன் அரசு வழங்கியது. இது 4000 கோடிக்கு மேல்.

அடுத்து, டெல்லி-ஆக்ரா சாலை அனில் அம்பானிக்கு வழங்கியது ஏன்? அதுவும்PPP முறையில். அதாவது தனியார் பொது நிறுவன கூட்டு முறையில். அரசு ஏன் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும்? மற்றவர்கள் எல்லாம்BOT முறையில் சாலை அமைக்கும் போது இவருக்கு மட்டும் ஐமு அரசு சிறப்பு சலுகை வழங்கியது ஏன்? ஐமு ஆட்சியில் 11600கோடி ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்திற்கும், 9000 கோடி ரிலையன்ஸ் நேவல் நிறுவனத்திற்கும், 12450 கோடி ஆர்காம் நிறுவனத்திற்கும் ஐமு ஆட்சியில் கடனாக வழங்கியுள்ளது. ஆக பப்புவின் பாஷையில் சுமார் 50000 கோடி அம்பானி சட்டைப்பையில் ஸ்கேமோனியா பப்பு மௌன்மோஹன் அரசு போட்டுள்ளது!!!

ஐமு ஆட்சியில், விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் பட்டேல் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 40000 கோடியில் விமானங்கள் வாங்கினார். இன்று அந்த நிறுவனம் அனைத்தையும் இழந்து நிற்கிறது. வருடத்திற்கு சுமார் 3600 கோடி வட்டி, இந்த வட்டிப் பணத்தில் 10 ரஃபேல் விமானங்கள் வாங்கி இருக்கலாம். பத்து ஆண்டுகளில் 50 விமானங்கள் வாங்கி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை??

இப்போது ரஃபேலுக்கு வருவோம்.

இது பாரத அரசாங்கத்திற்கும் பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தம். அரசுகளுக்கு இடையே நடைபெற்ற ஒப்பந்தத்தில் யார் பணம் பெற இயலும்?

இதிலே கொட்ரோச்சி, கிறிஸ்டியன் மைக்கேல், தல்வார், சஞ்சய் பண்டாரி போன்ற கான்கிராஸ் கட்சியின் ரெகுலர் தரகர்கள் இல்லை. அதனால் பப்புவிற்கு கோபமோ என்னவோ?

ரஃபேல் ஒப்பந்தம் 55000 கோடிக்கு மட்டுமே. ஆனால் பப்பு சொல்வது ஒருநாள் இரண்டு லட்சம் கோடி, ஒருநாள் ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி, இன்னும் பல.

இதில் ஆப்செட் கிளாஸ் – அதாவது இந்தியாவில் உற்பத்தியை, வேலை வாய்ப்பை பெருக்க 50% டசால்ட் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். அதில் ரஃபேல் விமானம் என்றில்லை, எது வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம். டசால்ட் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் வேறு விதமான விமானங்களுக்கு பாகங்கள் உற்பத்தி செய்வதாக உறுதியளித்தது. அதற்கு சுமார் நூறு நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும், அந்நிறுவனங்களை டசால்ட் மட்டுமே தேர்ந்தெடுக்கும். அதில் பாரத அரசாங்கமோ அல்லது பிரான்ஸ் அரசாங்கமோ தலையிடாது.

இதுவரை பத்து நிறுவனங்களை டசால்ட் தேர்ந்தெடுத்துள்ளது. அதில் ஒன்று அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம். இதைத்தான் மோடி அம்பானி சட்டையில் பணத்தை போட்டு விட்டார் என்று பப்பு உளறுகிறார். டசால்ட் நிறுவனம் சுமார் 3% ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒதுக்குகிறது. அதாவது சுமார் 800 கோடி ரூபாய். ஆனால் பப்பு திரும்ப திரும்ப சொல்வது 30000 கோடி என்று!

எங்கிருந்து இந்த 30000 கோடி வந்தது? இந்த பொய்யை தொடர்ந்து சொல்லி வந்தால் மக்கள் அதை உண்மை என்று நம்பி விடுவார்கள் என்பது சாம்பிட்ராடோவின் குதர்க்கமான ஐடியா! இதில் என்ன கொடுமை என்னவென்றால் இந்த சாம்பிட்ராடோவின் சாம்டெல் நிறுவனத்தையும் டசால்ட் தேர்ந்தெடுத்துள்ளது. இதைப் பற்றி இதுவரை பப்பு வாயே திறக்கவில்லை.

பப்பு திரும்ப திரும்ப சொல்லும் இன்னொரு பொய். ஐமு அரசு 520 கோடிக்கு ஒரு விமானத்தின் விலையை நிர்ணயித்ததாகவும் மோடி 1600 கோடி கொடுக்கிறார் என்று கூறுவது. இதற்கான விளக்கத்தை முகத்தில் அடித்தால் போல் நாடாளுமன்றத்தில் அருண்ஜெட்லி சொன்ன பின்பும் இன்னும் அதே பொய்யை சொல்கிறார்.

ஐமு அரசு முடிவு செய்தது வெறும் விமானம் மட்டுமே. உண்மையில் ஒரு விமானத்தை 120 மில்லியன் யூரோவிற்கு ஐமு அரசு முடிவு செய்தது. அதாவது அன்றைய யூரோ/ ரூபாய் மதிப்பில் ஒரு விமானம் 740 கோடி ஆகும். இன்று ஒரு யூரோவின் மதிப்பு ரூபாய் 81 ஆகும். அன்று விலை நிர்ணயித்தாலும் அவர்கள் விமானம் வாங்க ஒப்பந்தமே போடவில்லையே!

இன்றைய அரசாங்கம் வாங்குவது விமானத்துடன் ராடார், ஏவுகணைகள், குண்டுகள், லாஞ்சர், ஆயுதங்கள் மற்றும் பல. அத்துடன் பத்தாண்டுகளுக்கு அதன் பராமரிப்பு செலவு, உதிரி பாகங்கள், திறன் உறுதி செய்தல், கஸ்டமைசேஷன் உட்பட 55000 கோடிக்கு 36 விமானங்களை நம் நாடு வாங்குகிறது. வெறும் விமானத்தின் விலையையும், ஆயுதங்கள் நிரம்பிய விமானத்தின் விலையையும் ஒப்பிட்டு மோடி அதிக விலைக்கு வாங்கியதாக கூறுவது பைத்தியக்காரத்தனம்.

இதை விளக்கியும் பப்புவிற்கு புரியவில்லை. எனவே அவருக்கு புரியும் வகையில் “நீங்கள் பேரம் பேசியது வெறும் கோகோ கோலா காலி பாட்டில் எட்டு ரூபாய் என்ற விலையில். நாங்கள் வாங்குவது கோகோ கோலா பானம் நிரம்பிய இரண்டு லிட்டர் பாட்டில் 18 ரூபாய். இதுதான் வித்தியாசம்” என்று கூறினாலும் பப்புவிற்கு புரியவில்லை!

இந்த அரசாங்கம் 3.28 பில்லியனுக்கு ஆயுதங்களற்ற 36 விமானங்களை விலை பேசி இருக்கிறது. அதாவது ஒரு விமானம் சுமார் 92 மில்லியன். காங்கிரஸ் அரசாங்கம் முடிவு செய்தது 120 மில்லியன். எதன் விலை குறைவு? நேரு ஐஐடி க்களை உருவாக்கினர். அதில் படித்தவர்கள் எல்லாம் இன்று உலகப் புகழ் பெற்ற வல்லுனர்களாக இருக்கின்றனர். ஆனால் பரிதாபம் நேரு பரம்பரையில் வந்தவருக்கு சாதாரண கூட்டல் கழித்தல் தெரியவில்லை. பாவம்!!

இவற்றிற்கு என்ன காரணம்? மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் நேஷனல் ஹெரால்டு மற்றும் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழலில் குடும்பமே உள்ளே போகும். எனவே எப்பாடு பட்டாயினும் மோடி வரக்கூடாது என்பதற்காக வாய்க்கு வந்த பொய்களை இடதுசாரி மீடியா ஆதரவுடனும், மதமாற்றிகள், கொலைகார ஜிகாதி பயங்கரவாதிகள் மற்றும் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள் துணையுடன் ஓயாமல் சொல்லி வருகிறார் பப்பு ராஜா!

இன்னும் ஒன்று இவருடைய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லகுடபதிராஜூ தன்னுடைய லாங்கோர் நிறுவனத்திற்கு இவர்களுடைய ஆட்சிக்காலத்தில் வாங்கிய சுமார் 44000 கோடி வங்கிக் கடனை திருப்பித் தரவில்லை. அதை பப்பு வாங்கிக் கொடுத்தால் சுமார் 30 ரஃபேல் விமானங்கள் வாங்கலாம்! செய்வாரா???

கட்டுரை :- செந்தில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe