spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைபத்திரிகையாளர்களின் சாதி என்ன?: டாக்டர் கிருஷ்ணசாமியின் கேள்வி மிகச் சரியானது!

பத்திரிகையாளர்களின் சாதி என்ன?: டாக்டர் கிருஷ்ணசாமியின் கேள்வி மிகச் சரியானது!

- Advertisement -

பத்திரிகையாளர்களின் சாதி என்ன? டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் கேள்வி மிகச் சரியானது, மிக முக்கியமானது!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தமிழ்நாட்டின் ஊடகங்களின் நிலை குறித்து மிகச்சரியான, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியை எழுப்பியுள்ளார். அவரது கேள்வி ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான மிக முக்கியமான தொடக்கப்புள்ளி ஆகும்.

ஜனநாயக நாட்டின் நான்காவது தூணாக விளங்க வேண்டிய ஊடகங்கள், ஜனநாயகத்தை அழிக்கும் புற்றுநோயாக மாறியுள்ளன. இந்த பெரும் நோயை தடுத்து, ஜனநாயகத்தை காப்பாற்றவும், அதன் மூலம் நாட்டை காக்கவும் டாக்டர் கிருஷ்ணாசாமி அவர்களின் கேள்வி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக விவாதிக்கப்பட வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டின் ஊடகங்கள் தம்மீதுள்ள அழுக்கை மறைப்பதற்காக டாக்டர் கிருஷ்ணமி அவர்கள் மீது புழுதிவாரி தூற்றுகின்றன. இந்த அக்கிரம செயல் கண்டிக்கப்பட வேண்டும்.

நடப்பது என்ன?

டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் 28.5.2019 பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து ஊடகங்கள் பின்வருமாறு எழுதி வருகின்றன:

//தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம், “நீ என்ன சாதி?” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. ஒரு தலைவர் இப்படி பேசலாமா என மக்கள் அனைவரும் விமர்சித்து வருகின்றனர்// என்று ஊடகங்கள் கூறிவருகின்றன.

இதன் மூலம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் மிக நியாயமான, மிகத் தேவையான கேள்வியை தவறானதாக சித்தரிக்கின்றன. ஒருசில சமூகங்கள் மட்டுமே ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தினால், அது ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும் பெரும் கேடு என்பதால், ஊடகங்களில் வேலை செய்கிறவர்கள் யார், அவர்கள் சார்ந்திருக்கும் சமூக எது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கிறது.

உண்மையில், ஊடகங்களில் பணியாற்றுவோர், அதனை நிர்வகிப்போர் நாட்டு மக்களிடையே உள்ள பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். இத்தகைய ஊடக பன்முகத்தன்மைக்கான (Diversity in Media) தேவை மிக அவசியம் ஆகும். அதுதான் ஜனநாயகத்தையும் நாட்டையும் காப்பாற்றுவதற்கான மிக முதன்மை வழியும் ஆகும்.

ஊடகப் பன்முகத்தன்மை (Diversity in Media) எதற்காக?

தம்மைச் சுற்றியுள்ள அரசியல் உலகம் மற்றும் சமூக உலகம் குறித்த மக்களின் புரிந்துணர்வை ஊடகங்களே தீர்மானிக்கின்றன. ஒரு சமுதாயம், ஒரு மதம், ஒரு கட்சி, ஒரு அரசியல் நம்பிக்கை என எதை எடுத்தாலும், மக்கள் அதன் உண்மை நிலையை வைத்து மட்டும் மதிப்பிடுவது இல்லை. மாறாக, ஊடகங்கள் எவ்வாறு சித்தரிக்கின்றனவோ, அவ்வாறே பொது மதிப்பீடுகளும் உருவாகின்றன.

ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் சிக்கல்களில் அந்த நாட்டின் மக்கள் காட்டும் ஆர்வம் – ஊடகங்கள் அந்த சிக்கல்களை எவ்வாறு சித்தரிக்கின்றன என்பதிலிருந்துதான் உருவாகிறது. ஊடகங்கள் ஒரு சிக்கலை எவ்வாறு சித்தரிக்கின்றன என்பது – அந்த ஊடகத்தின் செய்தியாளர்களும் உரிமையாளர்களும் யாராக இருக்கின்றனர் என்பதை பொருத்துதான் முடிவாகிறது.

ஊடகங்கள் வெறும் தகவலையோ, செய்தியையோ மட்டும் பரப்பவில்லை. அவை ஒரு சமூகத்தின் பொது புத்தியையே தீர்மானிக்கின்றன. தனிமனிதர்கள், சமூகம், நாடு என எல்லாவற்றின் மீதும் ஊடகங்கள் கடுமையான தாக்கத்தை உருவாகுகின்றன. இதனால், ஊடகத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே சமுதாயத்தையும் நாட்டையும் கட்டுப்படுத்துகிறார்கள். இந்த அதிகாரம் சில தனிமனிதர்களிடமோ அல்லது ஒரு சில குழுவினரிடமோ குவியும்போது, அது ஜனநாயகப் படுகொலையாக மாறிப்போகிறது.

கண்ணில் எது தென்படவில்லையோ, அது மூளைக்கும் தென்படாது (out of sight, out of mind) என்பது ஒரு பொன்மொழி ஆகும். ஊடகங்கள் தான் மக்கள் மனதை கட்டுப்படுத்தி, அரசியல் பிரச்சினைகளையும் வாக்காளர்களின் மனநிலையையும் தீர்மானிக்கின்றன. ஜனநாயக நாட்டின் அரசியலை கட்டுப்படுத்துவதில் ஊடகங்கள் தான் முதலிடத்தில் இருக்கின்றன. இவ்வாறு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஊடகங்கள் பெரும்பான்மை மக்களை திட்டமிட்டு புறக்கணிக்கின்றன.

ஊடகப் பன்முகத்தன்மை இல்லை என்றால், ஜனநாயக அரசு முறையே தோல்வியடைந்து விடும். எனவே, ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் ஊடகங்களில் பன்முகத்தன்மை வேண்டும் என்கிற கோரிக்கை உலகம் முழுவதும் பேசப்படுகிறது.

ஊடகப் பன்முகத்தன்மை (Diversity in Media) என்றால் என்ன?

ஊடகங்கள் எந்த சமூகத்துக்காக, எந்த மக்களுக்காக செய்தியை வெளியிடுகிறார்களோ, அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே ஊடகமும் அமைய வேண்டும் என்பதுதான் ஊடகப் பன்முகத்தன்மை ஆகும். சமூகத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டும் ஆதிக்க செய்திகளை மட்டும் பரப்பாமல், சமூகத்தின் அனைத்து தரப்பினருக்குமான செய்திகளை அளிப்பதற்கான வழிமுறை இதுவாகும்.

ஊடகங்கள் வெளியிடும் செய்திகளும் தகவல்களும் அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஊடகங்களில் பணியாற்றுபவர்கள், செய்தியாளர்கள் தொடங்கி ஆசிரியர் குழு வரை, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியவர்களாக இருக்க வேண்டும்.

இந்த பன்முகத்தன்மைக்கு மூன்றுவிதமான வடிவங்கள் உள்ளன. 1. மக்கள் எந்த செய்தியை காண்கிறார்கள் அல்லது கேட்கிறார்கள் (what we see and hear), 2. செய்திகளை உருவாக்குவோர் யார் (who writes, reports and produces what we see and hear), 3. செய்திகளை அளிக்கும் சாதனம் யாருக்கு உரிமையாக இருக்கிறது (who owns the companies that dictate what we see and hear) – என்கிற இந்த மூன்று இடங்களிலும் பன்முகத்தன்மை இருக்க வேண்டும் என்பது பன்னாட்டு ஊடக நேறி ஆகும்!

இதன் மூலம் அனைத்து தரப்பினரின் குரலுக்கு செவிமடுக்கும் வகையிலும், அனைத்து தரப்பினருக்கான செய்திகளை வெளியிடும் வகையிலும் ஊடகங்கள் இருக்க வேண்டும்.

The media system, from broadcast television to local radio, should be fully representative of the communities that it serves. A diverse media is one that is inclusive of all social groups and women in content (what we see and hear), employment (who writes, reports and produces what we see and hear), and, most importantly, ownership (who owns the companies that dictate what we see and hear) so that the stories of all citizens can be told, and the voices of all citizens can be heard.

உலகின் மற்ற நாடுகள் ஊடகப் பன்முகத்தனமைய வலியுறுத்துகின்றனவா?

ஊடகப் பன்முகத்தன்மையை பல நாடுகள் சட்டப்படி கட்டாயமாக்கியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஊடகங்களில் பன்முகத்தன்மை கட்டாயம் தேவை என்பதை சட்டபூர்வமாக வலியுறுத்துகின்றன.

அமெரிக்க நாட்டில் எந்த ஒரு தொலைக்காட்சியும் 39% மக்களுக்கு மேல் பார்வையாளர்களாக இருக்கக் கூடாது என்றும், ஒருவர் எத்தனை ஊடகங்களை வைத்திருக்கலாம் என்பதற்கும் விதிமுறைகள் உள்ளன. அனைத்து பிரிவு மக்களையும் உள்ளடக்கியதாக ஊடகம் இருப்பதும் அனைத்து தரப்பு கருத்துகளையும் வெளியிடுவதும் அங்கு கட்டாயமாகும். நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சட்டப்படி ஊடகப் பன்முகத்தன்மை கட்டாயப்படுத்தப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் பிபிசி ஊடகப் பன்முகத்தன்மையை அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. 2016 ஆம் ஆண்டின் பிபிசி கொள்கைப்படி, 2020 ஆம் ஆண்டிற்குள் பிபிசி ஊழியர்களில் பெண்கள் எண்ணிக்கையை 50% அளவுக்கு உயர்த்துவது என்றும், ஆசிய நாட்டினர் மற்றும் கருப்பின ஊழியர்களின் எண்ணிக்கையை இப்போதைய 10% அளவில் இருந்து 15% அளவுக்கு உயர்த்துவது என்றும் கொள்கை வகுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஊடகப் பன்முகத்தன்மை (Diversity in Media) எவ்வாறு அமைய வேண்டும்?

ஊடகங்கள் எந்த சமூகத்துக்காக, எந்த மக்களுக்காக செய்தியை வெளியிடுகிறார்களோ, அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே ஊடகமும் அமைய வேண்டும் என்பதுதான் ஊடகப் பன்முகத்தன்மை ஆகும்.

எனவே, தமிழக ஊடகங்களில், தமிழக மக்கள் தொகையை பிரதிபலிக்கும் வகையில் – செய்தியாளர்கள் தொடங்கி, ஆசிரியர் குழு வரை அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறே, ஊடகங்கள் வெளியிடும் செய்திகளிலும் இந்த பன்முகத்தன்மை இருக்க வேண்டும்.

குறிப்பாக, பெண்கள், மதங்கள், தாய்மொழி, சமூகப்பிரிவுகள் ஆகிய அடிப்படைகளில் ஊடகங்கள் மக்கள் தொகையை பிரதிபலிக்க வேண்டும். வெளிவரும் செய்திகளும் இந்த மாறுபட்ட குழுக்களின் பார்வையை எதிரொலிக்க வேண்டும்.

ஊடகப் பன்முகத்தன்மை என்பது இன்னொரு இடஒதுக்கீட்டு கோரிக்கையோ, வேலைவாய்ப்பு கோரிக்கையோ அல்ல. இதனை அவ்வாறு கூறுவது பிரச்சினையை சிறுமைப்படுத்துவது ஆகும். இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான கோரிக்கை. உண்மையான நாகரீக சமூகமாக தமிழகம் மாறுவதற்கான கோரிக்கை.

என்ன செய்ய வேண்டும்?

2018 மே மாதம் 3 ஆம் நாள் கானா நாட்டின் அக்ரா நகரில் கூடிய ஐநாவின் யுனெஸ்கோ ஊடகங்கள் மாநாட்டில், ‘அக்ரா பிரகடனம்’ (Accra Declaration) எனும் அறிவிப்பை வெளியிட்டார்கள்.

அந்த யுனெஸ்கோ பிரகடனத்தில் “ஊடகங்களில் பன்முகத்தன்மையை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, சமூகத்தில் அங்கம் வகிக்கும் எல்லா பிரிவினரும் ஊடகங்களிலும் இடம்பெற வேண்டும் (fair representation in the media of different groups in society). அதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Accra Declaration: UNESCO World Press Freedom Day International Conference.- “We therefore: Call on each UNESCO Member State to:… Promote media diversity, including by preventing excessive concentration of media ownership, by requiring media outlets to be transparent about their ownership, …by promoting fair representation in the media of different groups in society.”

தமிழ்நாட்டின் ஊடகங்களில் உரிமையாளர்கள் யார் என்பதில் பன்முகத் தன்மையை கொண்டுவருவது (preventing excessive concentration of media ownership) தற்போதைய நிலையில் சாத்தியம் இல்லை. ஆனால், அந்த ஊடகங்களில் பணி புரிவோரில் (அதாவது, செய்திகளை யார் உருவாக்குகிறார்கள் என்பதில்) பன்முகத்தன்மையை கொண்டு வருவது (promoting fair representation in the media of different groups in society) சாத்தியம் தான்.

அதற்கான முதல் படியாக – தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊடகமும் தமது ஊடகத்தில் செய்திகளை உருவாக்கும் படிநிலைகளில் (ஆசிரியர் குழு, செய்தியாளர்கள்) தமிழ்நாட்டின் எந்த சமூகத்தினர் எத்தனை விழுக்காட்டினர் பணியாற்றுகிறார்கள் என்பதை வெளியிட வேண்டும் (உலகின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் அவ்வாறான பட்டியலை வெளியிடுகின்றன).

அந்த வகையில் தமிழக ஊடங்களில் படிநிலை பணிகள் வாரியாக OC, BC, MBC, தமிழ் மொழி பேசுவோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவினரும் எத்தனை விழுக்காட்டினர் வேலை செய்கிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறாக, ஊடகங்களில் செய்திகளை உருவாக்குகிறவர்கள் யார் என்பது வெளிப்படையாக தெரியும் பொது – அந்த ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் எவ்வாறு இருக்கும் என்பதை மக்கள் தாமாகவே அனுமானிக்க முடியும். அதாவது, எந்த ஊடகம் எத்தகையை செய்திகளை வெளியிடும் என்பது வெளிப்படையாக தெரியும்.

இவ்வாறாக, தமிழ்நாட்டின் ஊடகங்கள் தமது பன்முகத்தன்மையின் உண்மை நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வது ஒன்றே பத்திரிகை தர்மம் தமிழ்நாட்டில் படுகொலை ஆகாமல் தடுக்கும் வழியாகும்!

மொத்தத்தில், டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் கேள்வி, தமிழ்நாட்டில் பன்முகத்தன்மைக்கான (Diversity in Media) திறவுகோலாக அமைய வேண்டும்.

“Diversity must be regarded as a core journalistic value. If your coverage does not reflect your community, it’s not accurate”

  • David Yarnold, San Jose Mercury-News

கட்டுரை: இர. அருள் 

[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe