பாரதிக்கு ஒரு பிச்சைக்காரி போட்ட பிச்சை..!

bharathiar - 2026

முண்டாசுக் கவி, முறுக்கு மீசைப் புலவன் என்று பாரதியைக் கொண்டாடுகிறோம். அவனைப் படிக்காதவர்கள் கூட இந்த இரண்டு வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஜல்லியடித்துவிட்டுப் போவது வழக்கம்தான் இங்கே.

விழியோ, செவியோ, இதழோ இல்லாமல் ஒரு முக்கோணம், முறுக்கு மீசை இவற்றை வரைந்தால் அதை பாரதி எனப் பச்சைக் குழந்தைக் கூட அடையாளம் கண்டு கொள்ளும். ஆனால் மீசை இல்லாமல் பாரதி எழுதிய கவிதை ஒன்றுண்டு.

  1. புதுவை வாழ்க்கை சலித்துவிட்டது பாரதிக்கு. அவன் மனம் ஆன்மீகம் நோக்கிக் கனியத் தொடங்கியிருந்தது. ஒரு மாறுதலுக்காக யாருமறியாத இடத்தில் போய் பத்து நாள் இருந்து வரலாம் என நமக்குத் தோன்றுவது போலே அவனுக்கு(ம்) தோன்றியது.

நினைத்த மாத்திரத்தில் கிளம்புவதைப் போலவா அவனுக்கு வாழ்க்கை லபித்தது. அவன் புதுவையை விட்டு வெளியேறிய அடுத்த நிமிடம் அவனை அள்ளிக் கொண்டு போகக் காத்திருந்தது உளவுத் துறை.

ஆனால் காற்றைக் கையிலா சிறை வைக்க முடியும். புறப்படு என்று உள்ளம் அவனை உந்திக் கொண்டே இருந்தது.

தலைப்பாகையைக் கழற்றிப் போட்டான். மீசையை மழித்துக் கொண்டான். தாடியை வழித்தெறிந்தான். தலை ஏற்கெனவே வழுக்கை, அதை முண்டனம் செய்து கொண்டான்.

ஆனாலும் அடையாளம் கண்டு கொண்டுவிடுவார்களோ என்று ஒரு அரைச் சந்தேகம். அந்தக் கோலத்தில் அண்டை வீட்டில் இருந்த மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரைப் பார்க்கப் போனான். அன்றாடம் அவர் வீட்டுக்குப் போய் அரட்டை அடிப்பதும், அவர் மகள் யதுகிரியோடு விளையாடி விட்டு வருவதும் அவன் வழக்கம்.

இந்தக் கோலத்தில் பாரதியைக் கண்ட குழந்தை அடையாளம் தெரியாமல் யாரோ அன்னியன் என்றெண்ணி மிரண்டது. அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டது. அவர் நிமிர்ந்து பார்த்து யாரப்பா நீ என்றார்

பாரதிக்கு உற்சாகம் ஊற்றெடுத்தது. அன்றாடம் பழகியவர்களாலேயே அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்றால் காவலர்களால் கண்டு கொள்ள முடியாது என்பதைக் கண்டு கொண்டான்

புதுவையிலிருந்து அவன் போன இடம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள நாகை (நாகப்பட்டினம் அல்ல) அதை இன்று மேல நாகை என்று அழைக்கிறார்கள். அங்கே ஒரு பிடாரி அம்மன் கோயிலருகே அமர்ந்து எழுதிய பாடல்தான் “பாருக்குள்ளே நல்ல நாடு”

அந்தப் பாட்டிற்கான மெட்டு எங்கிருந்து கிடைத்தது தெரியுமா? அது அரண்மனை வளாகங்களில் அரும்பியதில்லை. மாளிகைத் தோட்டத்தில் மலர்ந்ததில்லை. இசையரங்குகளில் இருந்து பெற்ற இரவல் இல்லை. ஆலயங்கள் அருளிய பிரசாதம் அல்ல.

நாகைக்குப் பயணம் செய்யும் வழியில் ஒரு பிச்சைக்காரி பாடிய பாடலில் இருந்து பெறப்பட்டது.! (இந்துஸ்தானி மெட்டில் அமைந்த அதை இந்துஸ்தானி தோடி என்று பாரதி குறிக்கிறான்)

அது ஒரு பிச்சைக்காரி போட்ட பிச்சை!

(ஆகஸ்ட் 15 அன்று அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகவிருக்கும் என் உரையிலிருந்து… சிறு பகுதி!) 

– மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்)

1 COMMENT

  1. இங்கிவனை நாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்! திரு மாலனின் கட்டுரை அருமை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories