ஈக்வடார் நாட்டிலிருந்து ஹைதிக்கு பறந்த நித்தி! ஜெய்மி மார்சன் தகவல்!

nithiyanata - 2026

இங்கிலாந்தில் இருக்கும் ஈக்வடார் நாட்டு தூதர் ஜெய்மி மார்சன் ரோமெரோ, நித்தியானந்தா, கடந்த ஆண்டே வெளிநாட்டிற்கு தப்பியோடியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி சுற்றுலா பயணியாக ஈக்வடார் நாட்டில் நித்தியானந்தா நுழைந்ததாக அவர் கூறியுள்ளார்.

அதன் பின்னர், சர்வதேச பாதுகாப்பு தகுதி கோரி விண்ணப்பித்த நித்தியனந்தாவின் மனுவை ஆய்வு செய்த ஈக்வடார் அரசு, அக்டோபர் 19ம் தேதி அவருக்கு தற்காலிக விசா வழங்கியுள்ளது.

அதே நேரத்தில் நித்தியானந்தா கோரிக்கையின் உள்நோக்கத்தை அறிந்த அதிகாரிகள், அகதியாக ஏற்றுக்கொள்ளும் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக ஜெய்மி மார்சன் கூறியுள்ளார்.

கோரிக்கை நிராகரிப்பால் ஆத்திரமடைந்த நித்தியானந்தா, அந்நாட்டு அதிகாரிகள் மீது அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், இதன் விளைவாகவே கடந்த ஆகஸ்டு மாதம் ஈக்வடார் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஈக்வடாரிலிருந்து வெளியேறும்போது ஹைதி செல்லவிருப்பதாக நித்தியானந்தா கூறியதாகவும் ஜெய்மி மார்சன் தெரிவித்துள்ளார். மேலும், கைலாசா என்ற தீவு ஈக்வடார் நாட்டில் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

ஈக்வடார் நாட்டில் நித்யானந்தா இருக்கிறார் என்ற தகவலும் உண்மையில்லை. அவருக்கு நிலம் வாங்கவோ, தஞ்சம் புகவோ ஈக்வடார் அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என்றும் ஜெய்மி மார்சன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பெண் சீடா் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் கடந்தாண்டு விசாரணையை தொடங்கியபோதே நித்தியானந்தா தலைமறைவாகியுள்ளது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

குஜராத் ஆசிரமத்தில் சிறுமிகளை கடத்தி வைத்திருப்பதாக நித்தியானந்தா மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த பிறகு தான் அவரது லீலைகள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியுள்ளன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories