ஈக்வடார் நாட்டிலிருந்து ஹைதிக்கு பறந்த நித்தி! ஜெய்மி மார்சன் தகவல்!

nithiyanata - 2026

இங்கிலாந்தில் இருக்கும் ஈக்வடார் நாட்டு தூதர் ஜெய்மி மார்சன் ரோமெரோ, நித்தியானந்தா, கடந்த ஆண்டே வெளிநாட்டிற்கு தப்பியோடியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி சுற்றுலா பயணியாக ஈக்வடார் நாட்டில் நித்தியானந்தா நுழைந்ததாக அவர் கூறியுள்ளார்.

அதன் பின்னர், சர்வதேச பாதுகாப்பு தகுதி கோரி விண்ணப்பித்த நித்தியனந்தாவின் மனுவை ஆய்வு செய்த ஈக்வடார் அரசு, அக்டோபர் 19ம் தேதி அவருக்கு தற்காலிக விசா வழங்கியுள்ளது.

அதே நேரத்தில் நித்தியானந்தா கோரிக்கையின் உள்நோக்கத்தை அறிந்த அதிகாரிகள், அகதியாக ஏற்றுக்கொள்ளும் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக ஜெய்மி மார்சன் கூறியுள்ளார்.

கோரிக்கை நிராகரிப்பால் ஆத்திரமடைந்த நித்தியானந்தா, அந்நாட்டு அதிகாரிகள் மீது அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், இதன் விளைவாகவே கடந்த ஆகஸ்டு மாதம் ஈக்வடார் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஈக்வடாரிலிருந்து வெளியேறும்போது ஹைதி செல்லவிருப்பதாக நித்தியானந்தா கூறியதாகவும் ஜெய்மி மார்சன் தெரிவித்துள்ளார். மேலும், கைலாசா என்ற தீவு ஈக்வடார் நாட்டில் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

ஈக்வடார் நாட்டில் நித்யானந்தா இருக்கிறார் என்ற தகவலும் உண்மையில்லை. அவருக்கு நிலம் வாங்கவோ, தஞ்சம் புகவோ ஈக்வடார் அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என்றும் ஜெய்மி மார்சன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பெண் சீடா் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் கடந்தாண்டு விசாரணையை தொடங்கியபோதே நித்தியானந்தா தலைமறைவாகியுள்ளது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

குஜராத் ஆசிரமத்தில் சிறுமிகளை கடத்தி வைத்திருப்பதாக நித்தியானந்தா மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த பிறகு தான் அவரது லீலைகள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியுள்ளன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories