December 6, 2025, 8:17 AM
23.8 C
Chennai

டிசம்பர் 3 : உலக மாற்றுத் திறனாளிகள் தினம்; வைகோ வாழ்த்து

உலகில் பல்வேறு அக புற சூழ்நிலைகளின் காரணங்களால் ஊனம் ஏற்பட்டு சமுதாயத்தின் எல்லா நிலையிலும் வாழ்வுரிமைக்காக போராடிக் கொண்டு வருகிறார்கள் மாற்றுத் திறனாளிகள். வேதனையிலே சுழன்று கொடிய இருண்ட வாழ்வில் விடியலை எதிர்பார்க்கும் மாற்றுத் திறனாளிகள் அதிகார வர்க்கத்தினாரால் அலைகழிக்கப்பட்டு, அவமதிப்புக்கு உள்ளாகிறார்கள். காக்க வேண்டிய அரசின் கரங்களோ உரிமைகளை தர மறுக்கின்றது.

மாற்றுத் திறனாளிகள் கேட்பது பிச்சை அல்ல, உரிமை. அவர்களின் உரிமைகளை அரசு தர மறுத்தபோது மனம் தளராமல் நீதிமன்றங்களின் கதவைத் தட்டி தீர்ப்பினைப் பெற்றார்கள். மாற்றுத் திறனாளிகளால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை என்று தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் உள்ளது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு.

உலகப் பொதுமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், ஊனங்களை அங்கீகரித்து கல்வி, வேலைவாய்ப்பு, வன்கொடுமை உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளின் 21 வகையான பிரச்சினைகளை சீராய்வு செய்து கடந்த டிசம்பர் 28, 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றிய பின்பும், தமிழக அரசு அதை ஏற்று நடைமுறைப்படுத்தாமல் உள்ளது கண்டனத்திற்கு உரியது.

எனவே உடனடியாக இச்சட்டத்தை அமல்படுத்தி, மாற்றுத் திறனாளிகள் ஆணையம் அமைத்திட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளின் விடிவெள்ளி ஹலன் கெல்லர், என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியாவிடினும் சிலவற்றை செய்ய முடியும் என்று சொன்னார். அதற்கேற்ப தமிழ்நாட்டில் பிறந்த சாதனைத் தமிழன் மாரியப்பன் பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்றுத்தந்துள்ளார்.

என்னுடைய தலைமையில் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு மக்கள் மன்றத்தை உருவாக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருவதுடன், திருப்பதி தேவஸ்தான பாலாஜி மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர் ஜெகதீஷ் அவர்கள் மூலமாகவும் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து மறுவாழ்வுப் பணிகளை மனநிறைவுடன் செய்து வருகிறேன். நாடாளுமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதித்துள்ளேன்.

காலத்தால் கைவிடப்பட்டவர்களாக நிம்மதி வேண்டி சாய்வதற்கு தோள்களை தேடும் மாற்றுத் திறனாளிகளே நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள். முன்னேற்றப் பாதையில் தடைக்கற்களாக இருக்கும் அதிகாரவர்க்கத்தின் மன ஊனத்தை உடைத்தெறியும் காலம் விரைவில் வரும். இன்று இருக்கும் நிலை நாளை இருக்காது. 2018 ஆம் ஆண்டு நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.

சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ உலக மாற்றுத் திறனாளிகள் (03.12.2017) நாளில் எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரித்தாக்குகிறேன்.

வைகோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories