டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி., எல்லாம் இனி செல்போனில்! : போலீஸாரிடம் ’தொங்க’ வேண்டாம்!

டிஜிட்டல் மயமாகி வரும் இணைய யுகத்தில், சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, இனி கையில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்து பாதுகாப்பதுடன், டிஜிட்டல் வடிவிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான வசதியை அளிக்கிறது, மத்திய அரசின், ‘டிஜிட்டல் லாக்கர்’ திட்டம். இதற்கென, digitallocker.gov.in என்ற தனி இணையதள முகவரி உள்ளது.
‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த, ‘ஆன்லைன்’ பாதுகாப்பு பெட்டக வசதி, ‘டிஜி லாக்கர்’ எனும் பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய அளவில் இந்த வசதி இன்று, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்தின்படி, செல்போனில் ஓட்டுநர் உரிமமும் ஆர்.சி. வாகன பதிவு சான்றிதழையும் இணைக்கும் வசதியை மத்திய அரசு இன்று தொடங்கியுள்ளது.

ANDROID-ல் – டிஜி லாக்கர் என்ற அப்ளிகேஷனில் இந்த இணைக்கும் வசதிகளை மத்திய அரசு இன்று தொடங்கியது. இதுவரை 16 ஆவணங்கள் இந்த அப்ளிகேஷனில் இணைக்கும் வசதியை அரசு ஏற்படுத்திய நிலையில், 17வதாக வாகன ஓட்டிகளுக்கான ஆவணங்களை இணைக்கும் வசதியை நிதின் கட்காரியும் ரவிசங்கர் பிரசாத்தும் தொடங்கி வைத்தனர்.

நாடு முழுக்க உள்ள 19.5 கோடி வாகன பதிவுகள், 9 கோடி வாகன உரிமங்களும் இதில் இணைக்கப்படுகின்றன. பொதுமக்கள் இந்த app-ல் பதிவு செய்து கொண்டு இந்த வசதியை பயன்படுத்தலாம்.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

இந்த விவரங்கள் ஆதார் எண்ணில் பதிவு செய்திருந்தால் அந்த தகவல் இந்த ஆப்பில் தானாகவே இணைக்கப்பட்டுவிடும். எனவே, போக்குவரத்து காவல்துறையினர் இனி லைசென்ஸ் கேட்டால் செல்போனில் உள்ள ஆவணங்களை காட்டினாலே போதுமானது.

டிஜிட்டல் லாக்கர் ஒருவரது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். பொதுமக்கள் டிஜிட்டல் லாக்கர் அல்லது டிஜி லாக்கர் இணையதளத்தின் மூலம் தங்களுக்கான லாக்கர் வசதியை உருவாக்கிக் கொள்ளலாம்.

ஆதார் எண்ணை இணையதளத்தின் லாகின் பகுதியில் சமர்ப்பித்து தங்களுக்கான கணக்கைத் துவக்கலாம். அதன் பிறகு ஒருமுறை பாஸ்வேர்டு, மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த பாஸ்வேர்டு மூலம், லாக்கரை துவக்கிக் கொள்ளலாம். அதன் பின், பயனாளிகள் தங்களுக்கான பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளலாம்.

லாக்கரை அமைத்த பின், அதில் சான்றிதழ்களை பதிவேற்றி சேமிக்கலாம். பான் கார்டு, பள்ளி, கல்லுாரி சான்றிதழ், பாஸ்போர்ட், அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இதில் சேமிக்கலாம். சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அல்லது, ‘பி.டி.எப்.,’ கோப்பாக பதிவேற்றலாம். சான்றிதழ்களை யாருக்கேனும் சமர்ப்பிக்க விரும்பினால், லாக்கர் மூலமான, இ – மெயில் வழியே அனுப்பி வைக்கலாம். இதன் மூலம் கைகளில் சான்றிதழ்களை எடுத்துச் செல்வதை தவிர்க்கலாம்; சான்றிதழ் தொலைந்து விடும் எனும் கவலை இல்லாமலும் இருக்கலாம்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

இவை தவிர, பல்வேறு அரசு அமைப்புகளால் டிஜிட்டல் வடிவில் வழங்கப்படும் ஆவணங்களையும், இதில் சேமித்து வைக்கலாம். ஆவணங்களை இணைய கையெழுத்திட்டு பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.

பொதுமக்களுக்கு டிஜிட்டல் சேமிப்பு வசதியை அளிப்பதுடன், காகித பரிமாற்றத்தைக் குறைத்து அரசு நிர்வாகத்தையும் வேகமாக்க இது உதவும் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories