முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வந்துள்ளனர். இன்று காலை வந்த அவர்கள், ப.சிதம்பரம் வீட்டில் இல்லை என்ற பின்னர் சுமார் அரை மணி நேரம் கழித்து திரும்பிச் சென்றனர்.
முன்னதாக, தில்லி உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை நிராகரித்தது. இதை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுத்து விசாரித்து முன் ஜாமீன் முறையீடு செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றமும் அவசரவழக்காக விசாரிக்க முடியாது என்று கைவிரித்த நிலையில், ப.சிதம்பரம் வீட்டுக்குச் சென்ற சிபிஐ., அதிகாரிகள், தங்களது விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 மணி நேரம் கெடு விதித்து, அவரது வீட்டில் நோட்டிஸ் ஓட்டினர்.
ஆறு சிபிஐ., அதிகாரிகள் முதலில் சென்ற நிலையில், தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் சென்று விசாரித்துள்ளனர்.
ஆனால் சிதம்பரம் அந்த நோட்டீஸில் கூறப் பட்ட படி, ஆஜராகாமல் தப்பித்து ஒளிந்து கொண்டதாகக் கூறப் படுகிறது. இதனால், விசாரணைக்கு ப.சிதம்பரம் ஆஜராகாத நிலையில் 3 அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு இன்று காலை வந்துள்ளனர்.
அப்போதும் அவர் வீட்டில் இல்லாததால், அரை மணி நேரம் கழித்து அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.
The Central Bureau of Investigation (CBI) team has left from the residence of P Chidambaram. #Delhi https://t.co/sUhqMwwZ2t
— ANI (@ANI) August 21, 2019