யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் தொடர்பான நிதி விஷயங்களை கையாள்வதற்கான ஒரு குழுவினை அமைப்பதற்கு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த உத்தரவின் படி, இந்த நிதிக்குழுவுக்கு நிதித்துறை நிதி ஆணையர் தலைமை தாங்குவார். குழுவின் உறுப்பினர்கள் முதன்மைச் செயலாளர், உள்துறை கமிஷனர் செயலாளர், மின் மேம்பாட்டுத் துறை செயலாளர், பொது நிர்வாகத் துறை செயலாளர், சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் செயலர் ஆகியோர் இருப்பர்.
குழுவின் குறிப்பு விதிமுறைகள், யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசமான லடாக் தொடர்பான வருவாய், நிதி மற்றும் பிற தொடர்புடைய பிரச்னைகளை உணர்ந்து அளிப்பதாக இருக்கும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரு பிரதேசங்களிலும் பணியாளர்கள் தொடர்பான பிரச்னைகளை கையாள்வதற்கு நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆளுநரின் உத்தரவின் படி, இந்தக் குழு உள்துறையின் முதன்மை செயலாளர் தலைமையில் இருக்கும்.
யூனியன் பிரதேசமான லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஊழியர்கள் தொடர்பான வேறு ஏதேனும் பிரச்னைகள், அவற்றுக்கு ஊழியர்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதே குழுவின் விதிமுறைகள் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் படி, ஆளுநரின் ஆலோசகர் கே.கே.சர்மா தலைமை தாங்குவார். குழுவின் விதிமுறைகள்படி, பல்வேறு துறைகளில் மாநிலத்திலிருந்து முன்மொழியப்பட்டவர்கள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மாறுவதற்கும், உத்தேச யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் அரசுப் பணியில் ஈடுபடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முடிவு எடுக்கப் படும்.