காதல் துருப்பு ! மதம் மாற்றி திருமணம் ! பெண்ணை மீட்க பெற்றோர் கண்ணீர் கோரிக்கை !

lovejikath - 2026

கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு இந்து பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சம்பவமானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் இந்திரா. இவர் பல வருடங்களாக முஹமது ரிஸ்வான் என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதற்கு முன் இந்திரா இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார்.

இந்திராவின் பெயரை ஜூனைரா நர்மின் என்று மாற்றிக்கொண்டார். இத்தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது.

ஒரு வருடம் கழித்து பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளிக்க முன்வந்துள்ளனர். அதாவது இந்திரா “லவ் ஜிஹாத்” என்ற முறையினால் மூளைச்சலவை செய்யப்பட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார் என்று கூறுகின்றனர்.

ஆனால் காவல்துறையினர் இந்த புகாரை வாங்க மறுத்துள்ளனர். அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் புகாரை வாங்கவில்லை.இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கூறுகையில், “எங்கள் மகளை கட்டாயமாக மதமாற்றம் செய்ய வைத்துள்ளனர்.

எங்கள் மகள் ஏன் காவல்நிலையத்திற்கு வரவில்லை. அவரை வீட்டிற்குள் அடைத்து துன்புறுத்துகின்றனர். மேலும் அவரை சிரியா போன்ற நாடுகளில்‌ விற்கவும் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளனர். ஒரே ஒரு முறை எங்கள் முன் எங்கள் பெண் வந்து நின்றால் போதும்.” என்று கூறினர்.

காவல்துறையினர் கூறுகையில், “பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்தே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. கட்டாய மதமாற்றத்திற்கு ஆதாரம் இருந்தால் அவர்கள் சமர்ப்பிக்கலாம்” என்று கூறினர். ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தியாளர்கள் சிலர் ஜூனைராவை சந்திக்க சென்றனர்.

அப்போது அவர் “என் விருப்பத்திற்கேற்றவாறு நான் மதமாற்றம் செய்து கொண்டேன்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories