December 6, 2025, 3:36 AM
24.9 C
Chennai

காதல் துருப்பு ! மதம் மாற்றி திருமணம் ! பெண்ணை மீட்க பெற்றோர் கண்ணீர் கோரிக்கை !

lovejikath - 2025

கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு இந்து பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சம்பவமானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் இந்திரா. இவர் பல வருடங்களாக முஹமது ரிஸ்வான் என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதற்கு முன் இந்திரா இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார்.

இந்திராவின் பெயரை ஜூனைரா நர்மின் என்று மாற்றிக்கொண்டார். இத்தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது.

ஒரு வருடம் கழித்து பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளிக்க முன்வந்துள்ளனர். அதாவது இந்திரா “லவ் ஜிஹாத்” என்ற முறையினால் மூளைச்சலவை செய்யப்பட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார் என்று கூறுகின்றனர்.

ஆனால் காவல்துறையினர் இந்த புகாரை வாங்க மறுத்துள்ளனர். அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் காவல்துறையினர் புகாரை வாங்கவில்லை.இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கூறுகையில், “எங்கள் மகளை கட்டாயமாக மதமாற்றம் செய்ய வைத்துள்ளனர்.

எங்கள் மகள் ஏன் காவல்நிலையத்திற்கு வரவில்லை. அவரை வீட்டிற்குள் அடைத்து துன்புறுத்துகின்றனர். மேலும் அவரை சிரியா போன்ற நாடுகளில்‌ விற்கவும் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளனர். ஒரே ஒரு முறை எங்கள் முன் எங்கள் பெண் வந்து நின்றால் போதும்.” என்று கூறினர்.

காவல்துறையினர் கூறுகையில், “பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்தே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. கட்டாய மதமாற்றத்திற்கு ஆதாரம் இருந்தால் அவர்கள் சமர்ப்பிக்கலாம்” என்று கூறினர். ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தியாளர்கள் சிலர் ஜூனைராவை சந்திக்க சென்றனர்.

அப்போது அவர் “என் விருப்பத்திற்கேற்றவாறு நான் மதமாற்றம் செய்து கொண்டேன்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories