காலாவதியாகும் சட்டம்: கையைப் பிசையும் அரசு: மீண்டும் அவசரச் சட்ட முடிவு

Published:

புது தில்லி: நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அவசர சட்டம் 5–ந்தேதியுடன் காலாவதி ஆவதால், மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்த ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதியில், இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, நிலம் கையகப்படுத்தும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், அங்கு இன்னும் நிறைவேறவில்லை. மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அக்கட்சிகளை சரிக்கட்டும் பொறுப்பை மூத்த அமைச்சர்களிடம் பா.ஜனதா ஒப்படைத்துள்ளது. எப்படியும், மாநிலங்களவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றி விடுவது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்து, கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடரின் இரண்டாவது பாதி, ஏப்ரல் 20–ந்தேதி தொடங்குகிறது. இடைப்பட்ட காலத்தில், அதாவது ஏப்ரல் 5–ந்தேதியுடன், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அவசர சட்டம் காலாவதி ஆகிறது. எனவே, அந்த அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிப்பது என மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வமாக முடிவு செய்தது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இல்லத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்சபை கமிட்டி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img